பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

பிட்காயின் - மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாணயம்! இது ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு நாட்டின் அடையாளமாக விளங்குகின்றது. எனவே நாம் அனைவரும் நாணயத்தைக் கட்டிக் காக்க போராடுகின்றோம் மற்றும் கட்டுப்படுத்துகின்றோம். இது தனிமனிதனுக்கும் ஏன் ஒரு நாட்டிற்குமே பொருந்தும். எந்த ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் யாரும் ஒழுங்கு படுத்தாமல் நாணயம் இயங்கி வருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா. அது தான் மெய்நிகர் நாணயம்.

மெய் நிகர் நாணயங்களின் எழுச்சி

இந்தியாவில் மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு கடந்த சில ஆண்டுகளில் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாகச் சமீப காலங்களில் இந்த நாணயங்களின் மதிப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பிட்காயின் பயனர்கள் உள்ளனர்.

மெய்நிகர் நாணயங்களில் மீதான முதலீடு லாபகரமானதாக இருந்தாலும், அதனோடு இணைந்து சில பல பிரச்சனைகளும் உள்ளன. இந்த மெய்நிகர் நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில மிக முக்கியமான விஷயங்கள் இங்கே உள்ளன

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை
பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்கள் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி கூட "பிட்காயின் போன்ற அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படாத நாணயங்களின் புழக்கம் கவலையளிப்பதாக உள்ளது" என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மெய்நிகர் நாணயங்களைக் கையாளும் எந்தவொரு பயனாளரும், வைத்திருப்பவரும், முதலீட்டாளரும் அல்லது வணிகரும் அவர்களுடைய சொந்த ஆபத்தில் அந்த நாணயங்களைக் கையாளுகின்றனர்" என்று ரிசர்வ் வங்கி இந்த ஆண்டுப் பிப்ரவரி மாதம் தனது வலைத்தளத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களைப் பற்றி, இத்தகைய நாணயங்கள் நிதியியல், சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அபாயங்களுக்கு வித்திடுகின்றன எனவும் தெரிவித்துள்ளது

பிட்காயின் பரிவர்த்தனைகளைத் திரும்பப் பெற இயலாது
மெய்நிகர் நாணய சேவை வழங்குநருடன் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கும்போது, உங்களுடைய பணம் டிஜிட்டல் வாலட்டில் சேமிக்கப்பட்டு அந்தப் பணத்திற்கு ஒரு பொது மற்றும் ஒரு தனிப்பட்ட கடவுச் சொல் வழங்கப்படுகின்றது. பொதுக் கடவுச் சொல் என்பது உங்களின் மொபைல் எண் போன்றது. தனிப்பட்ட கடவுச் சொல் என்பது உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகும். நீங்கள் இந்த இரண்டு கடவுச் சொற்களையும் மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

பிட்காயின் நாணயத்தின் கடவுச்சொல்லை மீட்க முடியாது. இதை நீங்கள் நன்கு உணர வேண்டும். எனவே நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டால் உங்களுடைய பணம் பயனற்றதாக மாறி விடும். இதேபோல், ஒரு பிட்காயின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்தையும் திரும்பப் பெற இயலாது. எனவே, உங்களுடைய பிட்காயின் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டால், அதைக் கண்டிப்பாக மீட்க இயலாது.

போலி மெய்நிகர் நாணயங்கள்

மெய்நிகர் நாணயங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதில் போலிக்கும், உண்மைக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே, எந்த ஒரு மெய்நிகர் நாணயத்திலும் வர்த்தகம் செய்வதற்கு முன், உங்களுடைய அடிப்படை திட்டம், சந்தை முதலீடு மற்றும் கடந்த காலச் செயல்திறன் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் முதலீடு செய்யப்போகும் மெய்நிகர் நாணயத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து முடிவு செய்யுங்கள்.

மோசடி முகவர்கள்



வலைத்தளத்தில் நூற்றுக்கணக்கான மெய்நிகர் நாணய பரிமாற்ற முகவர்கள் உள்ளனர். அத்தகைய போலி முகவர்கள் உங்களிடம் அதிக வருமானத்தை வழங்குவதற்கான போலி வாக்குறுதியுடன், போலி நாணயங்களை விற்பனை செய்வர். எனவே, உங்களுடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், www.bitcoin.org என்கிற வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்களிடம் மட்டுமே பரிவர்த்தனைகளில் ஈடுபடுங்கள்.

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா..? தவறா..?


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வடகை விட்டில் இருக்கும் பலருக்கு சோஃபா, கட்டில் போன்றவற்றை வாங்குவது கூடுதல் செலவு என்பதை விட அதிகச் செலவு ஆகும். அதற்கு உதவுவதற்காகவே தற்போது ஃபனிச்சர்களை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் நகரத்தில் வாழும் பலருக்கு அதிகரித்துள்ளது. மொத்தமாக வாங்கிச் செலவை கூட்டிக்கொள்ளாமல், பராமரிப்பு செலவை ஏற்றிக் கொள்ளாமல் பல நன்மைகளை இது அளிக்கின்றது.

எனவே வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

வாங்கும் போதும், வாடகைக்கு எடுக்கும் போது என்ன செலவு ஆகும்?
ஆடம்பரமாக வாழக்கூடிய ஒரு வீட்டின் சோஃபா, தூங்கும் அறை, சமையல் அறை போன்று அனைத்து ஃபர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவு ஆகும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஃபர்னிச்சர் பொருட்களை வைக்க, வீடு மாறும் போது மாற்றி வைக்க, சுத்தம் செய்ய மற்றும் பராமரிப்பு போன்றவற்றையும் வாடகை கட்டணத்திலேயே அடங்கும். ஒரு வீட்டின் படுக்கை அறை ஃபர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் வாடகைக்கு எடுக்க மாதம் 1,2000 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இதையே நீங்கள் மொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 35,000 ரூபாய் வரை செலவு ஆகும்.

அதிகப் பயணச் சுமைகள்

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டின் ஃபர்னிச்சர் பொருட்களை வீடு மாற்றும் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் 20,000 ரூபாய் முதல் 30,000 வரை தேவைப்படும். இடம் மாற்றும் போது ஆகும் சேதங்கள் வேறு ஆகும்.

வாடகை சேவை அளிக்கும் நிறுவனங்கள்
ஃபுரலென்கோ, சிட்டி ஃபர்னிஷ் மற்றும் ரென்ட் மோஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் பூனே, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஃபர்னிச்சர் வாடகைக்கு அளிக்கும் சேவைகளை அளிக்கின்றன.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
சில வாடகை சேவை நிறுவனங்கள் வாடகைக்கு ஃபர்னிச்சர்கள் எடுக்கும் போது சிறு சேதங்களை இலவசமாகவே பராமரிப்பு செய்துகொள்கின்றனர். ஆனால் இது அவர்கள் கொள்கைகளைப் பெருத்தது. இதுவே ஒரு முறை செலவாகப் பொருட்களை வாங்கும் போது சில ஆண்டுகள் மட்டும் பழுது பார்க்கும் அல்லது மாற்றி அளிக்கக் கூடிய வாரண்ட்டி கிடைக்கும்.

இது உங்களுக்கானதா?


நீங்கள் பார்க்கும் வேலை அடிக்கடி இடம் மாறக்கூடியது அல்லது சிறிது காலத்திற்கு வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் இந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் தாற்காலிகமாக வாடகைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதே சிறந்த முடிவு ஆகும்.

வீட்டுக் கடனில்(Home Loan) 7 வகை உள்ளது.

வீட்டுக் கடனில்(Home Loan) 7 வகை உள்ளது.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


 உங்களுக்கான கடன் திட்டம் எது..?

தனக்கென ஒரு வீடு. இது ஒவ்வொரு மனிதனின் முதல் கனவாக இருக்கின்றது. கனவு கண்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்கும் வழிமுறைகளைப் பற்றி அறிந்து அவற்றின் வழியே பயணிக்க தொடங்கினால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும்.

நடுத்தர இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எழிய வழியே வீட்டுக் கடன். இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.

உங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, எது உங்களுக்கு மிகவும் உகர்ந்தது என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகையிலான வீட்டுக் கடன்களைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 7 வகையான வீட்டுக் கடன்கள் உள்ளது.


1) நிலம் வாங்குவதற்கான கடன்
ஒரு நிலத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான வீட்டை கட்டத் திட்டமிடுகின்றீர்களா? இதற்கு உதவ இந்தியாவில் உள்ள வங்கிகளாலும் அல்லது பிற வங்கி சாராத நிதி நிறுவனங்களாலும் (NBFCs) வீட்டு மனை வாங்க கடன் வழங்கப்படுகின்றது. பொதுவாக வங்கிகள் மனையின் மதிப்பில் சுமார் 80 முதல் 85% வரை கடன் வழங்குகின்றன.

2) வீடு வாங்க கடன்
மனை வாங்கி வீடு கட்டுவதற்கு பதில், புதிதாக ஒரு கட்டிய வீட்டை வாங்குவதற்கு இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. நிதி நிறுவனங்கள் வழக்கமாக ஒரு வீட்டின் சந்தை மதிப்பீட்டில் சுமார் 80 முதல் 85% வரை இதற்காக கடன் வழங்குகின்றன. இந்த கடன்களின் மீதான வட்டி விகிதம் மூன்று வகையாக நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் நிலையானது, மாறக்கூடியது அல்லது இவை இரண்டும் கலந்த கலவை ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

3) வீடு கட்டுமான கடன்
உங்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லது நீங்கள் பாகஸ்தராக உள்ள மனையில் வீடு கட்ட இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடன் நடைமுறையில் வீட்டுக் கடன், கடனுக்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் செயல்முறை போன்றவை பொதுவாக சந்தையில் நிழவும் பிற வீட்டுக் கடன் நடைமுறைகளை விட சில அம்சங்களில் வேறுபட்டது. அதாவது:

* வீட்டு மனை ஒரு வருட காலத்திற்குள் வாங்கப்பட்டிருக்க வேண்டும்
* வீட்டை நிர்மாணிப்பதற்காக உத்தேச செலவின மதிப்பீட்டை கடன் பெற விண்ணப்பிப்பவர் தெரிவிக்க வேண்டும்.
* மனையின் மதிப்பு கடனில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைப்படும் நிதி மட்டுமே கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

4) வீட்டை நீட்டிப்பதற்கான கடன்கள்
ஒருவர் தான் வசிக்கும் சொந்த வீட்டை விரிவாக்க அல்லது புணரமைக்க விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். சில வங்கிகள் தற்போதைய வீட்டின் விரிவாக்கத்தின் அடிப்படையில் இந்த கடனை வேறுபடுத்துகின்றன. பெரும்பாலான வங்கிகளில் இந்த வகை கடன்கள், வீட்டு மேம்பாட்டு கடன்களின் ஒரு பகுதியாக உள்ளன.

5) வீட்டை மேம்படுத்த கடன்
ஒருவருக்கு சொந்தமான வீடு இருந்து அவர் அதை மேம்படுத்த விரும்பினால், இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். தற்போதுள்ள வீடுகளை பழுது பார்ப்பது, சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது, ஆழ்துணை கிணறு தோண்டுவது, நீர்-காப்பு, மின் வயரிங் போன்றவை புணரமைப்பில் அடங்கும்.

6) என்.ஆர்.ஐ.-வீட்டுக் கடன்கள்
வெளி நாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் குடியிருப்பு வசதிகளை வாங்குவதில் ஆர்வமுடன் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த வகை கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு கடன் கட்டமைப்பு வழக்கமான வீட்டு கடன்களைப் போலவே இருந்தாலும், இதனுடைய காகிதப்பணி சற்று கூடுதலானது

7) வீட்டை மாற்றவதற்கு கடன்


ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மற்றொரு புதிய வீட்டை வாங்க விரும்பும் பொழுது இந்தக் கடனை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் தற்பொழுது உள்ள வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறிக் கொள்ளலாம்.

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?

 சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன்?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் ?
International Mutual Fund

மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகும்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்தவரை இந்தியர்கள் இந்திய நிறுவனம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இந்தியா திட்டங்களில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க்குகள் உள்ளன.

சாதாரண மற்றும் சர்வேதேச மியூச்சுவல் ஃபண்டு வித்தியாசம் என்ன?
சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்பது முதலீட்டாளர்கள் அவர்கள் நாட்டை விடப் பிற நாடுகளின் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். சாதாரண மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்கள் வசிக்கும் நாடுகளில் முதலீடு செய்வதாகும்.

சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா?
நல்ல மியூச்சுவல் ஃபண்டு மேலாளர்கள் என்றால் முதலீடுகளின் மேலே உள்ள ரிஸ்க்கை குறைப்பது ஆகும். இதுவே சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு என்றால் அதிக ரிஸ்க், கரண்ஸி விலை மாற்றம், பொருளாதாரம் என அனைத்தும்பிரச்சனை தான்.

தற்போதைய சுழலில் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விட இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிஸ் குறைவு மற்றும் அளிக்கக்கூடியவை ஆகும்.

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்?
தேசிய மற்றும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் 5 முதல் 7 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் அளிக்கும்.

யாருக்குச் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த தேவையாக இருக்கும்?
அதிக ரிஸ்க் மற்றும் தைரியமாக முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்கள் தான் பெரும்பாலும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன?


இந்தியர்கள் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 35 திட்டங்கள் உள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் திட்டங்களில் லாபம் சரிந்து கொண்டே வருகின்றன.

மியூச்சுவல் ஃபண்டில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?

மியூச்சுவல் ஃபண்டில்(Mutual Fund) முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


முதலீட்டுச் சந்தையில் பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவை உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான தேவைகளுக்கு ஏற்ப பொருந்தக்கூடிய பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன.

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முகவர்
இந்த முறையைப் பற்றி உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கலாம். இது தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மிகப் பழமையான மற்றும் பொதுவான வழிமுறையாகும். இந்தத் துறையில் நிபுணராக உள்ள ஒரு முகவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். செலவழித்த பணத்தின் மீது நீங்கள் அவருக்குத் தரகுப் பணம் எதுவும் தரத் தேவையில்லை. பரஸ்பர நிதி நிறுவனமே அதைச் செலுத்தும். அது செலவு விகிதத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது.

எந்தப் பரஸ்பர நிதியை வாங்க வேண்டுமென்று முகவர் உங்களுக்கு வழி காட்டுவார். உள்நுழைவு வசதிகளைக் கொண்ட பல நிறுவனங்களுடன் நிறைய முகவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். உங்கள் பரஸ்பர நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் உள்நுழைந்து பார்க்கலாம்.

ஏஎம்சி
ஏஎம்சி என்பதற்குச் சொத்து மேலாண்மை நிறுவனம் என்பது பொருளாகும். நீங்கள் ஏஎம்சி வழியாக நேரடியாக முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு இணைய வசதிகளை வழங்கும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன.

முதல் முறை நீங்கள் முதலீடு செய்ய நேரடியாக ஏஎம்சி அலுவலகத்திற்குச் செல்லலாம். அதன் பிறகு, நீங்கள் அந்தப் பரஸ்பர நிதி நிறுவனத்தில் அவர்களின் இணையத்தளத்தின் வழியாக இணையத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் வெவ்வேறு ஏஎம்சி க்களின் நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் அனைத்து நிறுவனங்களையும் சென்று பார்க்க வேண்டும். சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக நேரடியாக முதலீடு செய்யச் சிப் முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த வழியாகும்.

ஏஎம்எஃப்ஐ இணையத்தளம்
நீங்கள் ஏஎம்எஃப்ஐ இணையத்தளத்திற்கு மூலமாகவும் முதலீடு செய்யத் துவங்கலாம். இந்திய மியூச்சுவல் ஃபண்டு சங்கத்தின் இணையத்தளம் நாடு முழுவதிலுமுள்ள பரஸ்பர நிதிகளின் முகவர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. அங்கே முதலீட்டாளர்களின் மண்டலம் என்கிற ஒரு தலைப்பை நீங்கள் காணலாம். அதன் கீழ் ஏஆர்என் தேடல் என்கிற மற்றொரு தலைப்பைக் காணலாம். இது ஏஎம்எஃப்ஐ பதிவு எண்ணை குறிக்கிறது. அந்த எண் மீது சொடுக்குங்கள், இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள். உங்கள் அஞ்சல் குறியீட்டு எண் அல்லது உங்கள் நகரத்தின் பெயரை வைப்பதன் மூலம் உங்கள் பகுதியில் உள்ள முகவரின் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.

டீமேட் கணக்கு வழியாக முதலீடு செய்தல்
நீங்கள் ஒரு டீமேட் கணக்கு வைத்திருந்தால், அது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான மிக வசதியான முறைகளில் ஒன்றாகும். இங்கே நீங்கள் தரகு செலுத்த வேண்டும். சிலர் சமநிலையான கட்டணத்தை வசூலிக்கின்றனர். சிலர் சதவிகிதத்தின் அடிப்படையில் வசூலிக்கின்றனர். டீமேட் கணக்கின் வழியாகப் பரஸ்பர நிதிகளை நீங்கள் வாங்குதல் மற்றும் விற்றல் மூலமாக, நீங்கள் ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். ஜியோஜித் பத்திரங்கள், ஹெச்டிஎஃப்சி பத்திரங்கள், ஐசிஐசிஐ டைரக்ட், இந்தியா புல்ஸ், ஷேர் கான் போன்றவை இந்தத் துறையில் நன்கு அறியப்பட்டவை.

வலைத் தளங்கள்
உங்களை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நிறைய இணைய வலைத் தளங்கள் இருக்கின்றன. நீங்கள் வெறுமனே அதில் ஒரு கணக்கைத் தொடங்குங்கள். அவர்கள் அனைத்து ஆவணங்களையும் உங்கள் வீட்டிற்கே அனுப்புவார்கள். நீங்கள் ஒற்றைப் பைசா கூடச் செலுத்த தேவையில்லை. ஃபண்ட்ஸ் இந்தியா, ஃபண்ட்ஸ் சூப்பர் மார்க்கெட் போன்றவை அது போன்ற இணையத் தளங்களாகும். ஏஎம்சி யிலிருந்து கிடைக்கும் பங்குத் தொகை அவற்றின் முக்கிய வருமானமாகும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதியியல் திட்டவியலாளர் அல்லது ஆலோசகரிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு எப்பொழுதும் அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி


இப்போதெல்லாம் சில வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டு முகவர்களாகச் செயல்படுகின்றன. அருகாமையிலுள்ள உங்கள் வங்கிக் கிளைக்கு வருகை தந்து, அவர்கள் ஏதேனும் பரஸ்பர நிதித் திட்டங்களை விற்கிறார்களா என்று கேளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிதி இல்லத்துடன் அவர்கள் கூட்டுறவு வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்.

என்ஆர்ஐகள் (NRI) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

என்ஆர்ஐகள் (NRI) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நீங்கள் என்ஆர்ஐ ஆக இருந்து இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர் என்றால் இங்கு உள்ள எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் எளிதாக முதலீடு செய்யலாம்.

பவர் ஆப் அட்டார்னி

என்ஆர்ஐ இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவருக்கு இந்திய வங்கி கணக்கு ஒன்று இருக்க வேண்டும். அதனை நிர்வகிக்க இந்தியாவில் உள்ள ஒருவருக்கு பவர் ஆப் அட்டார்னி வழங்க வேண்டும்.

அதற்கு வெளிநாட்டில் உள்ள ஆதாரங்கள் உடன் ஸ்பெசிமன் கையெழுத்தையும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்கை நிர்வகிக்க வேண்டிய நபரும் படிவத்தில் கையெழுத்தை இட வேண்டும். மேலும் நிர்வகிப்பாளரின் வாடிக்கையாளர் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள பங்கு சந்தை முதலீடு

தங்களது கணக்கை பிறர் நிர்வகிப்பதை விரும்பாதவர்கள் இணையதள வங்கி கணக்கின் மூலம் தங்களது டீமேட் கணக்கையும் எளிதாக உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தாங்களாகவே முதலீடுகளை செய்ய முடியும்.

இணையதளம் மூலம் முதலீடு செய்ய விரும்பும் என்ஆர்ஐ-களுக்காக பிரத்தியேக டிரேடிங் சேவையினையும் சில ப்ரோக்ரேஜ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் தாங்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தினை பொருத்து டிரேடிங் கணக்கை நிர்வகிப்பது மட்டும் சிரமமாக இருக்கும்.

அங்கீகாரம் பெற்ற நபர்

என்ஆர்ஐ கணக்கை நிர்வகிக்க அங்கீகாரம் பெற்ற நபர் ஒருவரை நியமிக்க முடியும். என்ஆர்ஐ-க்கு பதிலாக அங்கிகாரம் பெற்ற நபராலும் கணக்கை நிர்வகிக்க முடியும்.

இதற்காக அங்கிகாரம் பெற்ற நபர் தேவையான ஸ்டாம்ப் பேப்பர் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும், மற்றும் எதற்காக ஆங்கிகாரம் பெற்ற நபராக நியமிக்கப்படுகின்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும். அங்கிகாரம் பெற்ற நபரால் முதலீடுகளைச் செய்ய முடியும், என்ஆர்ஐ-க்கு பதிலாக அனைத்துத் தேவையான ஆவணப் பனிகளையும் இவரால் செய்ய முடியும்.

வரம்பு



என்ஆர்ஐ கணக்கு வைத்துள்ளவர்கள் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு ஒன்றை நிர்வகிக்க வேண்டும். முதலீடு செய்யும் பொது அங்கிகாரம் பெற்ற நபருக்கான தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். என்ஆர்ஐ-க்கு அவர்கள் இருக்கும் நாடுகளில் உள்ள நேரங்கள் தான் பெறும் சிக்கலாக இருக்கும்.

எந்த வயதில் எப்படி வேலையை தேட வேண்டும்?

எந்த வயதில் எப்படி வேலையை தேட வேண்டும்?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வயது ஏறும் போது வேலைத் தேடல் கடினமாகிறது. 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்' எனப்படும் முதியவர்களுக்கு என்ற நாடு இல்லை என்ற திரைப்படத்தில் வருவதைப் போல உலகம் மாறுகின்றது என்பதை நீங்கள் நம்பினால் அதற்காக உங்களைக் குறை சொல்ல முடியாது.

பணியிலமர்த்தல் இளைய சமுதாயத்தினரை குறிப்பாக 35 வயதிற்குக் குறைவானவர்களை நோக்கிச் சாய்வது போலத் தோன்றுகிறது.

இளைஞர்களின் பக்கம் ஆதரவு

வயது ஏறும் போது வேலைத் தேடல் கடினமாகிறது. 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்' எனப்படும் முதியவர்களுக்கு என்ற நாடு இல்லை என்ற திரைப்படத்தில் வருவதைப் போல உலகம் மாறுகின்றது என்பதை நீங்கள் நம்பினால் அதற்காக உங்களைக் குறை சொல்ல முடியாது.

பணியிலமர்த்தல் இளைய சமுதாயத்தினரை குறிப்பாக 35 வயதிற்குக் குறைவானவர்களை நோக்கிச் சாய்வது போலத் தோன்றுகிறது.

இந்தியாவில் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பெரும்பாலான மேலாளர்கள் இளைஞர்களின் பக்கம் ஆதரவாக இருக்கிறார்கள், ஏனென்றால், சரியோ அல்லது தவறோ இளைஞர்கள் மிக அதிக அளவில் மலிவான் சம்பளத்திற்குக் கிடைக்கப்பெறுகிறார்கள், மேலும் அவர்கள் அதிக ஆற்றலுடன் இருக்கிறார்கள் மேலும் குறைந்த ஆர்வமுள்ள பாத்திரங்களில் கூட நீண்ட நேரம் பணியாற்ற தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். இறுதியாக, தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வியாபாரச் சூழலில் அனுபவத்திற்கு விலை மதிப்பு இல்லை.

இதைத் தெரிந்து கொண்டு, வெவ்வேறு வயதுகளில் சிறந்த விளைவுகளைப் பெற உங்கள் வேலைத் தேடும் யுத்திகளை எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் 20 வயதுகளில் வேலைத் தேடல்

வேலைச் சந்தை இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால், நீங்கள் ஏன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் 20 வயதுகளில் மிகப் பெரிய சவால் என்னவென்றால் உங்களிடம் ஒரு காலியான தனிப்பட்ட கல்வித்தகுதிக் குறிப்புகள் இருந்தாலும் ஒரு சிறந்த வாய்ப்பைக் கண்டறிவதே ஆகும். இரகசியம் என்னவென்றால், நீங்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே சீக்கிரமாக வேலை பார்க்கத் தொடங்கி விடுவது தான். உள்ளிருப்புப் பயிற்சிகளில் பங்கு கொள்ளுங்கள், உறவினர்கள் மற்றும் நண்பரிகளின் வியாபாரங்களில் வேலை பாருங்கள், நிகழ்ச்சிகள், என்ஜிஓ செயல்திட்டங்கள் தன்னார்வலர்களாக வேலை செய்யுங்கள் அல்லது தொழில்முனைவோரிடம் கூடச் சிறு வேலைகளைப் பாருங்கள்,

அந்தப் பேருந்தை நீங்கள் தவற விட்டிருந்தாலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு வேலையைத் தொடங்க ஒன்றும் அதிகத் தாமதமாகிவிடவில்லை. தொடக்கத்திலேயே சிறந்த ஒரு வேலையைப் பெறுவதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டாம். 5 வருடங்களுக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறுவதில் கவனத்தைச் செலுத்துங்கள். அதிக அபாயங்களை எடுங்கள், உங்கள் வீட்டிலிருந்து, நகரத்திலிருந்து, அல்லது நாட்டிலிருந்து வெளியே பயணம் செய்யுங்கள் மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளுக்கும் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

வேலைத் தேடத் துவங்கும் முன், உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நம்பும் திறன்களை, நீங்கள் நேசிக்கும் செயல்களை, நீங்கள் வேலை செய்ய விரும்பும் நிறுவனங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி, ஒரு உங்கள் சமூக இணைய மற்றும் தொழில்முறை சுயவிவரக் குறிப்பைச் சுத்தமான தொழிற்முறை சார்ந்த புகைப்படங்களுடன் மற்றும் பிழைகளில்லாத நிலையான வடிவத்தில் ஒரு சுயவிவரக் குறிப்பை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தொழில்முறையில் உடை அணிந்து கொள்ளுங்கள் மேலும் 30 - நிமிட நேர்காணல் அத்துடன் 30 - விநாடிகளில் உயரத்தை அடைவதற்கும் பயிற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மற்றும் இணையத்திலும் கல்லூரி வளாகத்திலும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலமும் நேர்காணல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள், அவர்களுடைய தொடர்புகள் உங்களை வலுப்படுத்தக்கூடியதாக அமையலாம்.

உங்கள் 30 வயதுகளில் வேலைத் தேடல்


இதில் ரகசியம் என்னவென்றால், நீங்கள் தற்போதைய வேலை தேடலை திட்டமிடவில்லை ஆனால் அதற்குப் பிறகான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சித்து விட்டீர்கள், கட்டு கட்டான திறமைகளைப் பெற்றுவிட்டீர்கள், மேலும் உங்கள் சுயவிவரக் குறிப்பில் சில வரிகளையும் பெற்றிருக்கிறீர்கள். இப்போது, அடுத்தப் பத்து வருடங்களுக்கு அதிகபட்ச வருமானம் ஈட்ட உங்களை நன்கு நிலைநிறுத்திக் கொள்வதற்கு நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நிலைப்புத்தன்மையைத் தேடும் போது, இன்னமும் நீங்கள் ஒரு வேலையைக் கண்டறியவில்லை என்றால், சில கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுத்துப் பார்க்கலாம். மழை நாளுக்காகச் சில மாத சேமிப்பை உருவாக்கிக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் 6 முதல் 8 மணி நேரங்களைத் தேடுதலுக்காக முதலீடு செய்யலாம் மேலும் ஒவ்வொரு புதிய நேர்காணல் மற்றும் தொடர்புகளையும் மகிழ்ந்து அனுபவித்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளைத் தேடுங்கள் இதனால் நீங்கள் வருங்காலப் பாத்திரங்களுக்கு நிபுணத்துவத்தையும் மற்றும் நற்பெயரையும் உருவாக்கலாம்.

உங்கள் தற்போதைய நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளுக்காகத் தன்னார்வமாக வேலைகளைச் செய்யுங்கள் மேலும் உங்கள் சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முன்னாள் முதலாளிகள் மற்றும் தொழிற்துறை வல்லுநர்களுடன் நல்லுறவை வளர்க்க நேரத்தை முதலீடு செய்யுங்கள். அவர்கள் உங்களுடைய வருங்கால வேலைகள் குறிப்பாக அடுத்த வேலைத் தேடலுக்குத் தொடர்புகளாக இருப்பார்கள். வழிகாட்டிகளைத் தேடுங்கள் மற்றும் நீங்கள் பார்க்கும் வேலையில் பொறுப்புக்களில் மாற்றம் கேட்டு உங்கள் தற்போதைய முதலாளியை அணுகுங்கள்.

உங்கள் 40 வயதுகளில் வேலைத்தேடல்


பெரும்பாலான தொழிற்முறையாளர்களுக்கு இது வருமானத்திலும் மற்றும் பணி சார்ந்த நல்ல தாக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதிலும் உங்கள் வேலையில் இந்தப் பத்தாண்டு காலம் மிகவும் ஆக்கப்பூர்வமானதாகும். இந்தப் பருவத்தில் வேலை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், நீங்கள் விலை மதிப்புள்ளவர் என்று உங்கள் முதலாளியை புரிந்து கொள்ளச் செய்வது. நீங்கள் ஏற்படுத்த விரும்பும் தாக்கங்கள், நீங்கள் கட்டுமானிக்கும் நம்பிக்கை மற்றும் நீங்கள் விரும்பும் அங்கீகாரம் மற்றும் திருப்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாய்ப்புகளைத் தேடுங்கள்.

இப்போது வரை உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றங்களைப் பற்றி ஒரு கதையைக் கட்டுமானியுங்கள். உங்கள் தலைப்பில் நிபுணத்துவம், உங்கள் தர நிறுவனம், மதிப்பு மற்றும் உங்கள் சமீபத்திய சாதனைகள் ஆகியவற்றை உயர்த்திக் காட்டும் அதே நேரத்தில் கடந்த காலத்தைச் சில வரிகளில் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சுயவிவரக் குறிப்பை செதுக்குவதில் நேரம் செலவிடுங்கள். உங்கள் லிங்க்ட்இன் பக்கம் உங்கள் சுயவிவரக் குறிப்பின் ஒரு சுருக்கப் பதிவாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது தொழிற்முறை தொடர்புகள், ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களில் வரும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தல் ஆகிய மூன்று விதமான தேடுதல்களையும் பயன்படுத்துங்கள். நீங்கள் தற்போது ஒரு வேலையில் இருந்து கொண்டே வேலை தேடுகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். விளக்கத்தை அடிப்படையாக வைத்து வேலைகளை ஒதுக்கி விடாதீர்கள். ஏனென்றால் அரிதாகத்தான் அவை வேலைக்கு ஆட்களை எடுக்கும் மேலாளர் தேடும் உண்மையான பணிகளாக இருக்கும்.

ஒரு நேர்காணலில் கடந்த காலத்தில் நீங்கள் உருவாக்கிய எண்ணிக்கை தாக்கத்தின் மீது கவனம் செலுத்துங்கள். உதாரணமாக, உற்பத்தி செலவை 12% குறைத்திருந்தால் புதிய முதலாளியிடம் அதே போன்ற வித்தியாசத்தை எப்படித் திட்டமிட முடியும்.

உங்கள் 50 வயதுகளில் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகளில் வேலைத் தேடல்


50 கள் அல்லது 60 வயதுகளில் உள்ளவர்களுக்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், புத்திசாலித்தனமான எதிர்வினைகள் மற்றும் இளைஞர்களுடன் வேலை செய்யும் திறமை போன்றவை இருக்காது என்று முதலாளிகள் பயப்படுகின்றனர். கூடுதலாக அவர்கள் அதிகச் செலவு வைப்பவர்களாக இருக்கக்கூடும். உங்கள் இலக்கு அந்தத் தவறான புரிதலை மாற்றுவதாக இருக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெற சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன. ஒரு தீவிரமான லிங்க்ட்இன் பக்கத்தை உருவாக்கவும் மற்றும் பிழைகளற்ற ஒரு சுயவிவரக் குறிப்பை உருவாக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். அது ஒரு பக்கத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கடந்த 10 வருட அனுபவங்களை அது கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் காலத்திற்கேற்றபடி மாற்றியமையுங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும் வேலை செய்ய விருப்பமாகவும் இருக்கிறீர்கள் என்பதை எடுத்துரைக்க எப்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக உடை அணியுங்கள். நேர்காணலுக்காகக் கடினமாகப் பயிற்சி செய்யுங்கள். பெரும்பாலான மூத்த தொழிற்முறையாளர்கள் வேலைவாய்ப்பு அவர்களைத் தேடி வரும் என்றும் நேர்காணல் செய்பவர்கள் அவர்களின் வயதுக்கு மரியாதை தருவார்கள் என்றும் நம்பி ஏமாற்றமடைகின்றனர்.

அவர்கள் சோம்பேறித்தனத்தையும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லாததையும் உணர்த்துகின்றனர். நீங்கள் ஒரு வேலை வாய்ப்பைத் தேடும் போது தன்னார்வ மற்றும் சம்பளமில்லாத பாத்திரங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணியிடத்தில் புகழ் பெறுவதற்காக நேரத்தைச் செலவிடுங்கள் உங்கள் விளையாட்டில் முன்னணியில் இருக்கத் தொழில்நுட்ப ஆன்லைன் வகுப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். வயது முதிர்ந்தோருடன் நட்பாக இருக்கும் நிறுவனங்களின் நேர்காணல்களை அணுகுங்கள். உங்கள் இளைய முதலாளிகள் மற்றும் சக பணியாளர்களிடம் நீங்கள் கடந்த காலத்தில் எப்படி வெற்றிகரமாக வேலைப் பார்த்தீர்கள் என்பதைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வயதாகி விட்டதால் சம்பளம் மற்றும் உங்கள் பாத்திரத்தில் விட்டுக் கொடுங்கள் மேலும் உரையாடல்களின் போது உங்கள் ஞானம், சார்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைச் செயல்முறையில் காட்டுங்கள். நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். வேலைத் தேடலின் போது பதட்டம் மன அழுத்தம் போன்றவற்றை வெளிப்படுத்தாதீர்கள்.

வயது எப்போதும் உங்கள் அளவு ஆவதில்லை

அக்கறையுடன் சிந்தியுங்கள்

ஹார்வர்ட் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் எல்லன் லாங்கரின் ஆய்வுகள் உங்கள் சிந்தனைத் திறனும் உடல் தகுதியும் நீங்கள் உலகை எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பெருமளவில் சார்ந்து வளைந்து கொடுக்கக்கூடியது என்பதைக் காட்டுகின்றன. உங்கள் மன நலத்தையும் உளவியல் திறனையும் மேம்படுத்திக் கொள்ள அக்கறையுடன் சிந்தியுங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள அன்றாட மாற்றங்கள் மற்றும் புத்துணர்வை கவனியுங்கள்.

லாபங்களைச் சிந்தியுங்கள்

உங்கள் தொழிலதிபர் அல்லது வியாபார நிறுவனத்திற்கு எப்படி அதிகப் பணத்தை உருவாக்கித் தர முடியும் என்று யோசியுங்கள் மேலும் நீங்கள் உருவாக்கிய லாபத்தில் ஒரு பகுதியைக் கேட்டுப் பெறுங்கள். உங்களுக்கு வருங்காலப் பணத்தைத் தரும் எந்த ஒரு வியாபாரமும் உங்கள் வயதைப் பொருட்படுத்தாது. தரகுக்கு விற்பனை செய்தல், மணி நேரங்களுக்குக் கணக்கெழுதி தருதல் ஆகியவை உதாரணங்கள்.

நிபுணராகச் சிந்தியுங்கள்

ஒரு மருத்துவருக்கோ வழக்கறிஞருக்கோ வயது ஒரு ஊனமல்ல. நிபுணத்துவமே பெரிதாக மதிப்பிடப்படுகிறது. நிபுணத்துவம் அனுபவத்தால் வருகிறது. நீங்கள் நிபுணராக இருக்கும் களத்தை அடையாளம் காணுங்கள். அது வயதில் இளைய ஒருவரால் வழங்க முடியாததாக இருக்க வேண்டும். நெருக்கடி நிலை மேலாண்மை மற்றும் சிக்கல்களைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்தல் ஆகியவை இங்குத் தகுதி பெறுகின்றன.

வழிகாட்டியாக இருப்பதைச் சிந்தியுங்கள்
வேலைச் சந்தைகள் அனுபவமற்ற இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் கவனம் செலுத்துவதால் அவை அனுபவம் வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்து குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அணிகளை வேகம் கூட்டவும் வேலைவாய்ப்புகளைத் தருகின்றன. உங்கள் தற்போதைய வேலையில் கூடச் செயல்திறனான ஆசிரியர் பணி மற்றும் வழிகாட்டி பாத்திரங்கள் உங்களை மதிப்பு மிக்க மேலாண்மை மற்றும் தலைமை பொறுப்புகளுக்குக் கொண்டு செல்லும்.

விளைவுகளைச் சிந்தியுங்கள்
உங்கள் திறமைகள் அல்லது அனுபவத்தைப் பற்றிச் சிந்திப்பது மற்றும் பேசுவதற்குப் பதிலாக விளைவுகளை மற்றும் பயன்களைப் பற்றிப் பேசுங்கள். உங்களால் ஒரு பிராந்தியத்தின் விற்பனை செயல்திறனை மாற்றி அதிகரிக்கச் செய்ய முடியுமா? உங்களால் கொள்முதல் செலவுகளைக் குறைக்க முடியுமா? வேலைச் சந்தையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, நீங்கள் ஒப்புக்கொள்ள விரும்பும் உறுதியான பயன்களைப் பற்றி முன்னதாக விவாதம் செய்யுங்கள் மேலும் லாபங்களில் உங்கள் பங்கையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு(Equity Mutual Fund) என்றால் என்ன? இதில் உள்ள திட்டங்கள் ?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு(Equity Mutual Fund) என்றால் என்ன? இதில் உள்ள திட்டங்கள் ?



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆகும். அது தானே பங்குச் சந்தை என்றால் அது தான் இல்லை. பங்குச் சந்தையில் தினமும் சந்தை நிலவரத்தைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொருத்த வரையில் சிறந்த நிதி ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யும் போது அந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை நிர்வகிக்கும் நிறுவனம் பல தரப்பட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து அதன் மூலம் வரும் லாபத்தினைப் பிரித்து அளிக்கும்

லார்ஜ்கேப் திட்டங்கள்

இந்தத் திட்டத்தினைப் பொருத்த வரையில் பிற ஈக்விட்டி திட்டங்களை விடக் குறைந்த ரிஸ்க் உள்ள பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். லார்ஜ்கேப் திட்டங்கள் பழமைவாத பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது ஆகும். இந்தத் திட்டங்கள் நிலையான ஒரு லாபத்தினை முதலீட்டாளர்களுக்கு அளிக்கும்.

ஸ்மால்கேப் திட்டங்கள்

ஸ்மால்கேப் திட்டம் என்பது சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வது ஆகும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் ஆகும், நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் குறைந்த அளவில் தான் இணையதளத்தில் இருக்கும். ஆனால் இவை அதிகப்படியான லாபத்தினை அளிக்கும். அதிக ரிஸ்க் இருந்தாலும் அதனைச் சமாளிக்கும் அளவிற்குப் பின் பலம் இருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை இந்தத் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

மிட்கேப் திட்டங்கள்

நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமே மிட்கேப் திட்டங்கள். இந்தத் திட்டங்களில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது ரிஸ்க்கும் இருக்கும், சில நேரங்களில் ரிஸ்க் இல்லாமலும் இருக்கும். ஆனால் இவர்களுக்கு லாபம் வரும் போது பெரிய நிறுவனங்களாக இவை வளரும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிக ரிஸ்க்கில் முதலீடு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS)

ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கை அளிக்கும். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கைப் பெறலாம். ஆனால் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது மூன்று வருடம் வரை லாக்-இன் காலம் ஆக முதலீடு செய்து இருக்க வெண்டும்.

பலவக்கைப்பட்ட ஈக்விட்டி திட்டங்கள்

நிதி மேலாளரின் சந்தை பார்வையினைப் பொருத்து சந்த மூலதனத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும் இது. பல சந்தை மூலதனங்களைப் பொருத்து இந்தத் திட்டங்கள் செயல்படுவதால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் திட்டங்களை விட இதில் ரிஸ் குறைவு. ஆனால் லார்ஜ்கேப் திட்டங்களை விட ரிஸ்க் அதிகம். மிதமான ரிஸ்க்கை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஈக்விட்டி சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள்

ஈக்விட்டி சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள் அல்லது பேலன்ஸ்டு திட்டங்களில் செய்யப்பட்ட 65 சதவீதம் முதலீடுகள் பங்கு சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இது கலவையான முதலீடு திட்டம் என்பதால் பங்கு சந்தை முதலீடுகளை விடக் குறைந்த அளவே ரிஸ்க் உள்ளது.

Arbitrage funds

ரொக்க மற்றும் டெரிவேடிவ் சந்தைகளுக்கு இடையேயான விலை வேறுபாட்டை வருவாயாக மாற்ற இந்தத் திட்டம் பயன்படுகின்றது. குறைந்த காலம் முதலீடு செய்து அதிக வரி விலக்கைப் பெறுவதற்கு ஏற்றதாக இந்த முதலீடு திட்டங்கள் உள்ளன.

துறை சார்ந்த திட்டங்கள்



இந்தத் திட்டம் குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்யும். ஒரு துறையில் இந்தத் திட்ட முதலீடுகள் செய்யப்படுவதினால் அதிக ரிஸ்க் இருக்கும். பொருளாதாரச் சுழற்சியைக் கண்டறிந்து முதலீடுகளை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டில் ஒரு சிறிய பங்கை மட்டும் துறை சார்ந்த முதலீடுகள் செய்வது நல்லது.

The Richest Man In Babylon Summary

The Richest Man In Babylon Summary



The Richest Man In Babylon gives common sense financial advice, which you can apply today, told through tales and parables from the times of ancient Babylon.

George S. Clason was a soldier, businessman and writer. The Richest Man In Babylon is his most popular piece of work, consisting of numerous parables, metaphors and stories set in ancient Babylon.

Originally published in 1926, the advice in this book is still as sound as it was almost a century ago.

The Babylonians discovered many of the basic principles behind wealth, such as saving a small part of your income each month, investing it wisely, learning how to lend money instead of borrowing it and how to protect your wealth.

Here are 3 lessons that you can apply right now to start building wealth:

Lesson 1: Live below your means.
Lesson 2: Learn how to be lucky by working hard.
Lesson 3: Never take on debt.

Ready to become the richest man (or woman) in Babylon? Let’s go!

Lesson 1: Live below your means.

What is it that makes rich people rich?

I’m not talking about the kids of millionaires or oil sheiks, who’ve always been rich.

I’m talking about the people who, after working hard for a few decades, can walk out the door of their job and never return again, because they can live off the wealth they have accumulated.

Do they stuff every penny they earn into their mattress? Or do they just work abnormal hours no one can keep up with?

The truth is in the middle.

Wealthy people develop their riches mostly based on 2 things:

Living slightly below their means.
Investing the money they save well.
Living below your means is the first checkpoint you have to pass to even have the money to invest, so why not start there?

The goal of our Western economy and education system is for you to take on a 40-hour day job and then spend everything you earn.

But nobody said you have to play that game.

You don’t have to stop drinking the occasional Latte or going to the movies. But you can still spend less than you earn.

You know best where you’re spending money just for the sake of convenience, entertainment and gratification, that’s really not necessary and that’s exactly the money you should be saving and investing instead.

The Richest Man In Babylon suggests you save 10% of your income to invest.

I personally have been saving 20% of my income for the past year and it’s put me in a much more relaxed situation financially where I have some savings and even a small portfolio of stocks.

So look at your expenses and cut the ones that are really unnecessary and you’ll see finding those 10% is easier than you think!

Lesson 2: Learn how to be lucky by working hard.

The summary intro said “learn how to be lucky”. What a fascinating idea, isn’t it?

But how can this book teach you something that’s really not in your hands?

This is where most people are mistaken. No one ever said luck was something that can’t be manufactured. We just expect it to be.

That’s something called chance. A random occurrence with very little likelihood of happening, such as winning the lottery or being struck by lightning.

Luck, however, is based on opportunity and you can create more opportunities by working hard.

Consider Jerry Weintraub’s story.

This man called Elvis’s manager every day for a year to pitch him a tour he wanted to take Elvis on.

364 times, the man said ‘No’. But eventually, on the 365th day, he said yes.

Jerry didn’t get lucky. He worked. Every day he called, until the timing was right and the opportunity presented itself to him.

That’s how you become lucky.

Lesson 3: Never take on debt.

This should (in theory) be a no-brainer for anyone, yet we find ourselves in a world where the average American is over $150,000 in debt.

One of the first steps to build wealth is quitting the irrational self-talk that makes you justify purchases you can’t afford.

Money is a pretty rational thing and it’s about time you started treating it that way.

When you can’t afford a fancy new car, or a flashy TV, well, you can’t afford it.

But when you go out and get a loan to finance it, you’ll delay your journey to wealth for months or even years, because you now have to spend the money you save each month to pay off the debt, instead of being able to invest it.

Instead of solving your problems with loans, ask “how can I afford this?” and figure out ways to make more money or save more money, so you can buy the things you want.

Taking on debt has never solved any problems, it just creates more, so finish the spending spree and start saving!

My personal take-aways
The sad part first: the summary only includes one parable from the book. However, on the plus side, Blinkist did a really great job of extracting the financial advice in it, adapting it to modern times and making it clear.

They take their job of providing “non-fiction book summaries” seriously, so naturally, most of the fiction had to go.

You can read both the summary and the book quite independently from one another. The summary has the distilled financial tips, the book conveys the points in a longer, but maybe stronger way, because they’re wrapped into amazing stories.

I’ve read some of the parables in the book (you can read them individually) and I like both, so two thumbs up here!

What else can you learn from the blinks?
Why you should never give money to a lumberjack (unless he wants to start a tree felling business)
What Socrates can teach you about the financial crisis of 2008 (it could’ve been avoided with his tip)
Which scientific method of making progress you must use to build wealth
The difference between making money and attaining wealth
How to become a lender and why money gets better at working for you over time
Which boy scout motto you have to live by if you want to reap the most of the luck you create
Who would I recommend The Richest Man In Babylon summary to?
The 21 year old on his first corporate job, who’s happily spending his income every month, the 45 year old who’s taken on a loan or two to finance luxury purchases, and anyone who buys lottery tickets on a regular basis.

Don't put off to tomorrow what you can do today! - K.Karthik Raja Collections

Don't put off to tomorrow what you can do today! - K.Karthik Raja Collections

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 






Why age is just a number

Don't put off to tomorrow what you can do today! - K.Karthik Raja Collections

    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

Govt aadhaar Web link with Banks,Insurance and Etc

Govt aadhaar Web link with Banks,Insurance and Etc


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


*Aadhaar Update Link*
https://ssup.uidai.gov.in/web/guest/update

*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy

*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php

*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx

*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp

*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/

*Aadhaar Official Website*
https://uidai.gov.in/

*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup

*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1

*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile

*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

HOW Rs.10,000 BECAME Rs.500 CRORES

HOW Rs.10,000 BECAME Rs.500 CRORES

This is a lesson - both in patience and conviction.



  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்




Mohammed Anwar Ahmed, 60, resides in the sleepy town of Amalner in district Jalgaon, Maharashtra. His father owned a large farmland in the 1970's. The father's untimely death in 1980 left the four sons to lead different paths in their lives. They sold the land and divided the proceeds of Rs.80,000 equally among themselves. Mohammed, the youngest of the four, then aged 27, was married for two years and had a year old son. On parting with his brothers, he was at crossroads and did not know the path he should choose for himself as all his working life he had worked on the fields. His one brother left Amalner while the two started their own shops.

                              WHAT'S SO SPECIAL ABOUT AMALNER?

In 1947, Chairman of WIPRO Ltd. and philanthropist Azim Premji's father Mohammad Hussain Hasham Premji set up the company's first plant here to manufacturer vegetable ghee, vanaspati and refined oils. It was then called Western India Vegetable Products Ltd. and had got listed on the stock exchange in 1946. Over the years many residents of Amalner worked at the plant and several residents were shareholders of the company. In 1966, Mr.Azim Premji became Chairman of the company.
                                           A CHANCE MEETING

As Mohammed Anwar Ahmed sat near a tea shop in Amalner, a young stock broker from Bombay (now Mumbai) named Satish Shah stopped to ask a question. This meeting would change the life of Mohammed Anwar Ahmed. Satish Shah had come to Amalner to buy as many shares as he could on behalf of some clients in Bombay. The question that Satish Shah asked was : “Do you know anyone here who owns shares in that factory?” pointing to the WIPRO plant. Mohammed replied that the owners of the factory stays in Bombay. In short 15 minutes, Satish explained to Mohammed, how owning a share could make one a part owner in the company. This made Mohammed inquisitive and the meeting lasted for 30 more minutes. Mohammed helped Satish Shah go door to door to collect shares from willing sellers (in very small towns nearly everyone knows each other) and for himself bought 100 shares of Rs.100 face value, thus investing Rs.10,000 from the total of Rs.20,000 that he had. The rest, he invested in starting a trading business.

                                         THE JOURNEY TO WEALTH

From then on Mohammed started to think himself as part owner of WIPRO (and rightly so) and vowed never to sell a single share till Mr. Azim Premji is at the helm. Here is how his initial investment of Rs.10,000 grew to over Rs.500 crores.

He had invested in 100 shares at face value of Rs.100 in 1980. The initial investment was Rs.10,000.

In 1981, the company declared a 1:1 bonus. He now had 200 shares.

In 1985, the company declared 1:1 bonus. He therefore had 400 shares.

In 1986, the company split the share to Rs.10. He thus had 4000 shares.

In 1987, the company declared 1:1 bonus. He hence had 8000 shares.

In 1989, the company announced a 1:1 bonus. Now he had 16,000 shares.

In 1992, the company declared a 1:1 bonus. By now he had 32,000 shares.

In 1995, the company declared a 1:1 bonus. He then had 64,000 shares.

In 1997, the company declared 2:1 bonus. He now held 1,92,000 shares.

In 1999, the company split the share to Rs.2. He now had 9,60,000 shares.

In 2004, the company declared 2:1 bonus. He thus had 28,80,000 shares.

In 2005, the company declared 1:1 bonus. He came to have 57,60,000 shares.

In 2010, the company declared 2:3 bonus. He now had 96,00,000 shares.

The current market price is Rs.500 per share. The shares are valued at Rs.480 crores.

Over the past 33 years, the company regularly paid out dividends and increased them almost every year. Cumulatively he received Rs.118 crores as dividend over the past 33 years. Thus by investing Rs.10,000, Mohammed gained Rs.598 crores.

He is now retired and donates freely to charity from the dividends he receives. His foreign educated children often advice him to sell the shares but he has kept his vow of not selling a single share till Mr.Azim Premji is the working Chairman.

This is a lesson - both in patience and conviction.