எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இன்றைய சூழலில் அனைத்துச் செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், நீங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கும் வழிமுறைகளைத் தேடுகின்றீர்கள் என்றால், நீங்கள் ஒரு சிக்கல்களற்ற மற்றும் எளிமையான முறையில் அதை இணையத்தில் செய்யலாம்.
எனவே, உங்கள் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் இணையத்தில் தொடங்குவதற்கான படிப் படியான வழிகாட்டுதல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

கேஒய்சி

எஸ்ஐபி எனப்படும் பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் இணையக் கேஒய்சி எனப்படும் நிறுவனங்கள் கேட்கும் "உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ஆவணங்களைப் பதிவேற்றுவது அவசியமானது ஆகும்.

தேவையான ஆவணங்கள்

எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் கேஒய்சி ஆவணங்களான அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் நிதி நிறுவனங்கள் ஐபிவி எனப்படும் ஒரு நபரை நேரடியாகச் சரிபார்க்கும் முறையிலும் உங்கள் இருப்பைச் சோதனை இடுகிறார்கள்.

எஸ்ஐபி தொகையின் விவரங்கள்

பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், உங்கள் எஸ்ஐபி பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து, மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் கழிக்கப்பட வேண்டிய எஸ்ஐபி தொகையின் விவரங்களை வழங்குவதற்கு ஒரு காசோலைப் புத்தகம் ஆகியன தேவைப்படும் இதர ஆவணங்களாகும்.
கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யவும், அவசியமான ஆவணங்கள் மற்றும் விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கும், மின்னஞ்சல் கேஒய்சி வசதியைப் பெற ஏதேனும் ஒரு நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள்.

கேஒய்சி நிதி நிறுவனங்களுக்கு மதிப்புடையது

ஒரு இணையத் தளத்தில் செய்யப்படும் கேஒய்சி ஆவணங்கள் பதிவேற்றமானது, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்னஞ்சல் கேஒய்சி ஐ பெற நீங்கள் பணப் பரிமாற்ற முகவர்கள் அல்லது பதிவாளரின் இணையத் தளத்தை அணுகலாம்.

கேஒய்சி ஆவணங்கள் செயல்முறை

இந்தக் கேஒய்சி ஆவணங்கள் செயல்முறையில் உங்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்றின் மென் நகலைப் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். கேஒய்சி செயல்முறைக்கு நீங்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்கலாம். இது வீடியோ சரிபார்ப்பிற்காக ஐவிஆர்ஐ செய்யும், மேலும் அடிப்படை விவரங்கள் அடங்கிய முன்கூட்டி நிரப்பப்பட்ட ஒரு படிவத்தையும் வழங்கும்.

இறுதிப் படி

நிதி நிறுவன இணையத் தளத்தில் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்க இறுதிப் படி நிலை
அவசியமான கேஒய்சி ஆவணங்கள் செயல்முறைகளை முடித்து நீங்கள் எஸ்ஐபி முதலீட்டை செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். பிறகு, அங்கே ஒரு புதிய முதலீட்டாளராக உங்கள் விவரங்களை உள்ளிடலாம். இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்ய, நிதி நிறுவன இணையத் தளமானது உங்களை உள் நுழைவு ஆதாரச் சான்றுகளை வழங்குமாறு கேட்கும்.

வங்கி விவரங்கள்



தானியங்கிக் கடன் கழித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் அம்சங்களுக்காக மேற்கொண்டு வங்கி விவரங்களை வழங்க வேண்டியது அவசியமாகும். பிறகு, நிறுவனம், எஸ்ஐபி செயல்முறையில் பணம் கழிக்கப்படுவதற்கு ஒரு பொருத்தமான தேதியைக் கேட்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு மாத காலத்தில் உங்கள் எஸ்ஐபி முதலீடு தொடங்கப்படும்.

பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?

பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மக்களில் பலர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பதில்லை. ஆனால், அப்படி வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியிருக்கிறார்கள். சில பாலிசிதாரர்கள் ஒரே நேரத்தில் ஒரு குழு காப்பீட்டின் கீழும் காப்பைப் பெறுகிறார்கள்.
ஒரு திட்டத்திலிருந்து மற்றொன்று வேறுபட்ட பாதுகாப்பு நற்பயன்கள் இருந்தால் மட்டுமே, ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரரிடம் பாலிசி வைத்திருப்பது என்பது புத்திசாலித்தனமானதாகும்.ஒரே மாதிரியான காப்பீட்டுக் கொள்கைகளை உடைய பல்வேறு இழப்பீட்டுறுதிக் காப்பீட்டுத் திட்டங்கள் பாலிசிதாரருக்கு பயனளிக்காது.

பல்வேறு காப்பீட்டு
எனவே, பல்வகைக் காப்பீடுத் திட்டங்களில் காப்பீட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் பரஸ்பரம் பிரத்தியேகமானதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பல்வேறு காப்பீட்டு நற்பலன் பாலிசிகளை வாங்கும்போது, இரண்டாவது காப்பீட்டுதாரருக்கு முதல் பாலிசியின் இருப்பைப் பற்றி அறிவிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும், ஏனென்றால், அது எழுத்துறுதியின் ஒரு முக்கியப் பகுதியை உருவாக்குகிறது.

உடல்நலக் காப்பீடு
உடல்நலக் காப்பீடுகளான மெடிக்ளைம் போன்றவை இழப்பீட்டுறுதிக் காப்பீடுகளாகும். அதாவது, பாலிசியின் முன்னுறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் மருத்துவமனைக் கட்டணங்கள் மட்டும் இழப்பீட்டுத் தொகையாகத் திருப்பியளிக்கப்படும்.
உடல் நலக் காப்பிட்டுத் திட்டங்களில் உள்ள இதர மாறுபாடுகள் என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன் கொள்கைகள் ஆகும். அதாவது, காப்பீடு செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகை வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிகழும்போது (நோய் வாய்ப்படும்போது) மருத்துவமனை செலவுகளைப் பொருட்படுத்தாமல் திருப்பிச் செலுத்தப்படும்.

இழப்பீட்டுறுதிக் காப்பீடுகள்
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருந்தால், ஒரு பாலிசிதாரராக, தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை யாரேனும் ஒரு காப்பீட்டுதாரரால் செலுத்தப்படும். பாலிசிதாரர் அவர் / அவள் காப்பீட்டுத் திட்டம் வைத்திருக்கும் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களையும் அணுக வேண்டியது கட்டாயமல்ல. தாக்கல் செய்யப்பட்டக் காப்பீட்டு தொகையை பாலிசிதாரர் விரும்பும் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
சில வருடங்களுக்கு முன்பு 'நன்கொடை விதிமுறை' யின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையின் தீர்வு வழங்கப்பட்டதைப் போல இப்போது வழங்கப்படுவதில்லை என்பதால், ஒட்டுமொத்த மருத்துவமனைச் செலவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கிடையே பகிர வேண்டிய தேவையில்லை. இந்த விதிமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர் வைத்திருக்கும் பாலிசிகள் மற்றும் காப்பீட்டுத் தொகையின் விகித அடிப்படையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களாலும் வழங்கப்படுகிறது.

காப்பீடு அளிப்பவரால் பகுதியாக செலுத்தப்படுகிறது.
ஒருவேளை ஒரு காப்பீட்டு நிறுவனத்தார் ஒரு குறிப்பிட்ட ஒட்டுமொத்த தொகையை செலுத்தாமல் போனாலோ அல்லது அனுமதிக்காமல் போனாலோ, அத்தகைய சூழ்நிலையில் பாலிசிதாரர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தை அணுகலாம். கடந்த வருடம், ஐஆர்டிஏஐ "பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கும் ஒரு பாலிசிதாரர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியால் காப்பீட்டு தொகையை பெற அனுமதிக்கப்படாத நிலையில், காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிடவில்லை என்றாலும் கூட, இதர பாலிசிகளிலிருந்து காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்து பெறும் உரிமையை பெற்றுள்ளார்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காப்பீடு செய்யப்பட்டத் தொகையில் அயர்ச்சி
ஒரு பாலிசியில் காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட மருத்துவமனைக் கட்டணங்கள் அதிகமானால், ஒருவர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மீதித் தொகையை தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம். "கழித்தல்கள் அல்லது இணை பண செலுத்தல்கள் கருதப்பட்டதற்கு பிறகு ஒரு ஒற்றைப் பாலிசியின் கீழ் தாக்கல் செய்யப்பட்டத் தொகை வரையறுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைவிட அதிகமானால், பாலிசிதாரருக்கு அவர் / அவள் விரும்பும் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து மீதித் தெகைக்கு தாக்கல் செய்யும் உரிமை உண்டு," என்று சொல்கிறார் டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத் தலைவர் திரு. எம். ரவிச்சந்திரன்.

எந்த பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒரு பாலிசிதாரர் என்ற முறையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒருவர் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தாரையும் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு மதிப்பீடு அளிக்கச் சொல்லி கேட்கலாம். ஏனென்றால் தாக்கல் செய்யப்படாத போனஸின் மீது (என்சிபி) மற்றும் தற்போதைய பாலிசியின் காத்திருப்புக் காலம் ஆகியவற்றின் மீது தாக்கல் செய்யப்பட்டதன் பாதிப்பு இருப்பதால், ஒருவரால் இதை எப்படி முடிவெடுக்க முடியும்? "ஒன்று சேர்க்கப்பட்ட போனஸ் தொகை அதே விகிதத்தில் குறைக்கப்படுகிறது. அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. ஆனால் காத்திருப்புக் காலத்தின் மீது எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை," என்று சொல்கிறார் குப்தா.
குழு உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருக்கும் ஒருவருக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமானதாகும். "ஒரு வாடிக்கையாளர் ஒரு சில்லறை விற்பனை பாலிசியும் ஒரு குழு பாலிசியையும் வைத்திருந்தால், முதலில் குழு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகைக்கு தாக்கல் செய்வது சிறந்ததாகும். ஏனென்றால், சில்லறை விற்பனை பாலிசியில் தொகுக்கப்பட்ட என்சிபி போன்ற நற்பயன்களும், உடல்நலப் பரிசோதனைகளுக்கு தாக்கல் செய்யும் வசதிகளும் இல்லை. மேலும், பொதுவாக குழு பாலிசிகளில் சில்லறை பாலிசிகளை விட, குறிப்பாக காத்திருப்புக் காலம் தொடர்பாக பரந்த அளவில் காப்பீட்டு வசதிகள் இருக்கின்றன" என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.

காப்பீட்டைத் தாக்கல் செய்வது எப்படி
தாக்கல் செய்வதற்கு காப்பீட்டு நிறுவனத்தார் அசல் மருத்துவமனை ரசீதுகளையும் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விவரங்களையும் தருமாறு வலியுறுத்துகின்றனர். ஒரு பாலிசிதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் தொகைக்கு தாக்கல் செய்ய நேர்ந்தால், ஆவணங்கள் தொடர்பான விசாரணைகள் இருக்கும். "இரண்டாவது காப்பீட்டு நிறுவனத்தாரிடம் வாடிக்கையாளர் காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்வதற்கு ஆவணங்களின் உண்மையான பிரதிகளுடன் (சுய சான்றளிக்கப்பட்டது) முதல் காப்பீட்டு நிறுவனத்தாரிடமிருந்து பணத்தை செலுத்தியதற்கான அசல் தீர்வு கடிதத்தையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்." என்று அறிவிக்கிறார் குப்தா.

பல்வேறு பாலிசிகளை வைத்திருத்தல்: முன்கூட்டி வரையறுக்கப்பட்ட - காப்புறுதி நற்பயன்கள்.
சிக்கலான நோய்களுக்கான திட்டங்கள் பொதுவாக ஒத்த முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களாகும். அவை ஒரு இணை காப்பீட்டுத் திட்டமாகவும் (ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன்) அல்லது தனியாக நிற்கும் காப்பீட்டுத் திட்டமாகவும் வருகின்றன. ஐஆர்டிஏஐ விதிகளின் படி, பல்வேறு முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களின் மீது செய்யப்படும் அனைத்து தாக்கல்களுக்கும் ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்தாராலும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
"உடல்நலக் காப்பீட்டுத் திட்ட ஒழுங்குமுறை சட்ட விதி 2016 இன் பிரிவு 24 கூறுவது என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன்களை வழங்கும் பல்வேறு பாலிசிகளில், காப்பளிக்கப்பட்ட நிகழ்வு ஏற்படும்போது பாலிசியி்ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் இதே போன்ற மற்ற பாலிசிகளின் கீழ் பெறப்பட்ட தொகை அல்லாமல் தனிப்பட்ட முறையில் காப்பீட்டுத் தொகை தாக்கல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்," என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.
சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் ஒப்பீட்டளவில் தாக்கல் செய்வது மிகவும் எளிதானதாகும். "சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட திட்டங்களாகும் மேலும் பாலிசியின் கீழ் காப்பளிக்கப்பட்ட நோய்கள் ஏற்படும் அந்த நேரத்திலேயே மருத்துவமனை ரசீதுகள் எதையும் சமர்பிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட தொகைச் செலுத்தப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் பேங்க் பஜார் பொது காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் அட்ரே பரத்வாஜ்

நிறைவு


ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை வைத்திருக்கும் பாலிசிதாரர் என்ற முறையில், வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும். பொருளாதார மற்றும் உடல்நல நிலைகள், ஏற்கனவே இருக்கும் வியாதிகள் ஆகியவற்றை பற்றி மட்டுமல்லாமல், நீங்கள் தற்போது ஏதேனும் பாலிசிகளை வைத்திருந்தால் அதைப் பற்றியும் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு தெரியபடுத்தியிருக்கிறீர்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.

பேலன்ஸ்டு ஃபண்டுகளளில்(Balance Funds) ரிஸ்க் இல்லையா?

பேலன்ஸ்டு ஃபண்டுகளளில்(Balance Funds) ரிஸ்க் இல்லையா?



         பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மே மாதத்தில் நிதிப் பிரிவின் முதலீடுகள் அதிகபட்சமாக இருந்தன. முதலாவதாகப் பங்குக் குறியீட்டுச் செயல்திறனால் தூண்டப்பட்டது. இந்த நிதி, முதல் முறையாக முதலீடு செய்யும் ஆபத்துக்களை விரும்பாத அதே சமயம் ஒரு ஹைபிரிட் முதலீட்டுப் பந்தயத்தில் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த பந்தயமாகும்.
பங்குப் பிரிவில் வெளிப்பாடு காரணமாக நிகரச் சொத்து மதிப்பு நிதியில் ஏற்படும் எந்த ஒரு பொருளாதார வீழ்ச்சியும் கடன் இருப்பில் ஈடு செய்யப்படுகின்றன. 65% மேல் பங்குப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில், ஒரு அளவு வரை ஃபோர்ட்ஃபோலியோவில் கடன் இருப்பால் சமநிலைப்படுத்தப்பட்ட பரஸ்பர நிதி வகைப்பாட்டிற்கு நிச்சயமாக அபாய அம்சங்கள் இருக்கிறது.

அபாயங்கள்
எனவே ஓய்வு பெற்ற பிரிவினரும் மற்றும் பங்குச்சந்தையின் ஏற்றத்தாழ்வுகளை வெறுக்கும் தனி நபர்களும் இப்போது கண்டறியப்படாத இந்த முதலீட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் சொந்த அபாயங்களில் ஈடுபடுகின்றனர்.

பேலன்ஸ்டு ஃபண்டு
வழக்கமான சொத்து ஒதுக்கீட்டுப் பண்புகள் காரணமாக நீண்ட காலப் பேலன்ஸ்டு ஃபண்டு உயர்ந்த அளவு வருவாயை வழங்குகின்றது. சமபங்கு மற்றும் கடன் விகிதத்தை 65:35 என்ற விகிதத்துக்கு நெருக்கமாகப் பராமரிக்க முதலீட்டாளர் தற்போதைய சந்தை நிலைப்பாட்டின் அடிப்படையில் இலாபங்களை முன்பதிவு செய்ய வேண்டியது தேவையாகும். இந்த விகிதமானது ஒரு பங்கு சார்ந்த திட்டமாக வரி அனுகூலங்களைப் பெறுவதற்கான தகுதி பெற இந்தத் திட்டத்திற்குத் தேவையான அளவீடாகும்.

வரி ஆதாயங்கள் மற்றும் வருவாய்
எனவே கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பேலன்ஸ்டு ஃபண்டு திட்டம் கடன் உட்கூறுகளில் வரி ஆதாயங்களையும், சுமார் 15% உயர்ந்த அளவு வருவாயையும் ஈட்டியுள்ளது. எனவே இவை முதல் முறையாகப் பங்குகளில் முதலீடு செய்யும், அவர்களுடைய மதிப்பீட்டிற்கு மிகப்பெரிய விலை வீழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியாத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். ஆனால் நிச்சயமாக அபாயமற்றது அல்ல. மேலும் பங்கு முதலீட்டுத் துறைக்குப் புதிய ஒரு முதலீட்டாளராக, சமீப காலமாகக் குறைந்த ஏற்றத்தாழ்வு வெளிப்பாட்டைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தச் சமச்சீர் நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளலாம்.

பாதுகாப்பு


எனவே இந்தப் பேலன்ஸ்டு ஃபண்டு திட்டங்களில் செய்யப்பட்ட உங்கள் முதலீட்டில் வளர்ச்சியுடன் பாதுகாப்பையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?

பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 11 பேமென்ட் வங்கிகளுக்கு உரிமங்களை வழங்கியுள்ளது. இந்த வங்கிகள் சாமானிய மக்களுக்கு என்ன சேவை அளிக்கிறது.
இதன் மூலம் நமக்கு என்ன லாபம்..? இத்தகைய வங்கிகளில் நாம் எதை கவனிக்க வேண்டும்.. எந்த விஷயத்தில் உஷாராக இருக்கும். இதுக்குறித்து ஒரு சின்ன அலசல்.. வாங்க பார்போம்.

வைப்புத் தொகைகளின் மீது தரப்படும் வட்டி விகிதம்
பேமென்ட் வங்கிகள் டிஜிட்டல் வாலட்டுகளுடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குகின்றன. ஆனால் பாரம்பரிய வங்கிகளைப் போல அதே அளவு வசதிகள் இல்லை. அவர்களுடைய சேவைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்கள் வழங்கும் வட்டி விகிதத்தை சரிபாருங்கள்.
பாரம்பரிய வங்கிகளைப் போலவே பேமென்ட் வங்கிகளும் கூட சேமிப்புக் கணக்குகளில் போடப்படும் வைப்புத் தொகைகளுக்கு வட்டியை வழங்குகின்றன.
ஆனால் வட்டி வகிதம் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடும். தற்போது, வருடாந்திர வட்டியாக ஏர்டெல் பேமென்ட் வங்கி 7.25% வழங்குகின்றது, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 5.5% வழங்குகின்றது மற்றும் பேடிம் பேமென்ட் வங்கி 4% வழங்குகின்றது.

வசதி மற்றும் எல்லையளவு
பேமென்ட் வங்கிகள் இதர வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறதா என்று விசாரித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தற்சமயம் ஏர்டெல் அது போன்ற ஏடிஎம் கார்டுகளை வழங்குவதில்லை.
இருந்தாலும், உங்களுக்கு ஒரு டெபிட் கார்ட் தேவை என்றால், இந்தியா போஸ்ட் அல்லது பேடிம் உங்களுக்கு சிறப்பாகப் பொருந்தும்.

தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
பெரும்பாலான பேமென்ட் வங்கிகள் என்பிஎப்சி இல்லாத பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் பேமென்ட் வங்கிகளை வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் மற்றும் கையகப்படுத்தும் ஒரு இயங்கும் முறையாக பயன்படுத்துகின்றன.
உதாரணமாக, பேடிம் அதன் இ-வர்த்தக தளத்தில் பேடிம் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக நீங்கள் ஷாப்பிங் செய்தால் பணத்தை மீளப் பெறுதல் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக கட்டணங்களுக்குப் பணம் செலுத்தும் வசதிகளைப் பயன்படுத்தினால் ஏர்டெல் உங்களுக்குத் தள்ளுபடிகளை வழங்குகிறது.
எனவே, நீங்கள் பெரும்பாலும் எத்தகைய வசதிகளைப் பெற விரும்புகிறீர்கள் மற்றும் எந்த வகை தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன என்பதைப் பொறுத்து நீங்கள் பேமென்ட் வங்கியைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள்
வட்டி விகிதங்களைப் போலவே பேமென்ட் வங்கிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக ஏர்டெல் பேமென்ட் வங்கி நீங்கள் பணத்தை எடுத்தால் 0.65% மற்றும் நீங்கள் வேறு வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையின் மீது 0.5% சேவைக் கட்டணங்களை விதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் உயர்ந்த டிக்கெட் பரிவர்த்தனைகளுக்கு கணிசமாக உள்ள மதிப்புக் கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மீதான கட்டண உயர்வுகளை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

பாரம்பரிய வங்கிகளுக்கு இது மாற்றல்ல
பேமென்ட் வங்கிகள் பாரம்பரிய வங்கிகள் போல வாடிக்கையாளர்களுக்கு பணத்தை முன்தொகையாகவோ கடனாகவோ கொடுக்காது. அவை காசோலைப் புத்தகங்களையும் மற்றும் டெபிட் கார்டுகளையும் வழங்கும்.
ஆனால் க்ரெடிட் கார்டுகளை வழங்காது. மேலும், பாரம்பரிய வங்கிகள் போல அல்லாமல் பேமென்ட் வங்கிக் கணக்குகளில் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே நீங்கள் வைத்திருக்க முடியும். தற்போது ஒரு கணக்குக்கு ரூபாய் 1 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேமென்ட் வங்கிகள், நிறுவப்பட்ட பாரம்பரிய வங்கிகளுக்கு மாற்று அமைப்பு அல்ல. பாரம்பரிய வங்கிகள் நிறைய சேவைகளை வழங்குகின்றன. பாரம்பரிய வங்கிகள் மற்றும் டிஜிட்டல் வங்கிகள் இரண்டுமே அவற்றிற்குரிய சொந்த தகுதிகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக இருக்க முடியாது.

வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..!

வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..!


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இப்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்கள் உடைமைகளான நகைகள், பணம் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை உங்கள் சொந்த அபாயத்தில் வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் உங்கள் உடைமைகளுக்கு ஆபத்து நேர்நதால் வங்கிக்கு அதற்கு நஷ்ட ஈடு தரும் பொறுப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது.

மேற்கொண்டு அந்த அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில், வங்கி அவர்களின் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உறவானது ஒரு வீட்டு உரிமையாளருக்கும் மற்றும் வாடகைதாரருக்கும் இருக்கும் உறவைப் போன்றது.
எனவே, அத்தகைய உறவில் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது வங்கியில் லாக்கர் வைத்திருப்பவரின் பொறுப்பாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பத்திரமாக வைத்துக் கொள்ளப் பாதுகாப்பான வழிகளைத் தேடுகிறார்கள்.

காப்புத் திட்டம்

அதே சமயம், இதர சிலர் அவர்களது மதிப்பு மிக்கச் சொத்துக்களை ஒரு பிரத்யேகமான காப்புத் திட்டத்தை வாங்கி அதில் பாதுகாப்பாக வைக்க நினைக்கிறார்கள். இந்தப் பிரிவு வாடிக்கையாளர்களை பொறுத்த வரை வங்கி லாக்கர்கள் தான் இதரத் தேர்வுகளை விட அதிகப் பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள்.

சொத்து மதிப்பீடு

எனவே வீட்டுக் காப்பீடு அல்லது வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து அபாயக் காப்பீடுகளாக கூடுதல் சேர்ப்புக் காப்பீடுகள் கிடைக்கப் பெறுகின்றன.
இந்தக் காப்பீடுகள் உங்கள் குடியிருப்புச் சுற்றுப்புறத்திற்கு வெளிப்புறம் இருக்கும் உங்களுடைய சொத்து மதிப்பீடுகளுக்கு காப்பீடு அளிக்கிறது.

எப்படி பாதுகாப்பு அளிக்கிறது?

நகையின் மதிப்பைப் பொறுத்து காப்பீட்டின் வரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ. 10 இலட்சத்திற்கு இடையில் அமைக்கப்படுகிறது. இருந்தாலும், ஒரு நகையை மாற்றி அமைப்பதற்கான கட்டணம் சுமார் ரூ. 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் போது மதிப்பீட்டுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கட்டணம்

நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நகையின் வகை, உடை, அத்துடன் மாற்றியமைப்பதற்கான கட்டணம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
மேலும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒட்டுமொத்தக் காப்பீட்டைப் பொறுத்து நகை காப்புக்கு பல்வேறு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் ஒரு இணை வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 3 இலட்சத்திற்கான மொத்த வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி சொல்லப் போனால், அதில் நகைக்கான காப்பீடு அதிகபட்சம் 25% கிடைக்கப்பெறும்.

காப்பீட்டிற்கு காப்பீட்டு முனைமத் தொகை குறைவு
சந்தையில் தங்கத்தின் மதிப்பை ஒப்பிடும் போது அத்தகைய காப்பீட்டுத் திட்டத்திற்கு காப்பீட்டு முனைமம் மிகக் குறைவு. மேலும் நகையில் சந்தை மதிப்பில் 0.5-1% க்கும் இடையிலான வரம்பில் உள்ளது.

இழப்பு ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்யலாம்
தாக்கல் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களான சேதாரம் அல்லது திருட்டு தொடர்பான ஆவணங்கள், மொத்த இழப்பீட்டு மதிப்பீடு, முதல் தகவல் அறிக்கையின் நகல், மதிப்பீட்டுச் சான்றிதழ் அல்லது நகைகளின் விலைப்பட்டியல் போன்றவற்றை வழங்குவதன் மூலம் இழப்பீட்டிற்கு தாக்கல் செய்யலாம். இயற்கைச் சீற்றங்களின் விளைவாக சேதங்கள் ஏற்பட்டால், நிலநடுக்கவியல் அல்லது வானிலையியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா ? செக் செய்வது எப்படி..?

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஜூலை 27ஆம் வரையில் மத்திய அரசு கண்டறிந்த சுமார் 11 லட்ச போலி பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் சரியான தகவல் அளிக்காமல் இருக்கும் பான் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
இதன் மூலம் உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். டீஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால் உங்கள் பான் கார்டு எண்ணை மீட்டு எடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் உங்கள் பான் எண் ஆக்டிவாக உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதை இங்கே பார்க்கலாம்.

படி 1:
முதலில் வருமான வரித்துறையின் இணையத்திற்கு செல்லுங்கள்
www.incometaxindiaefiling.gov.in

படி 2
முதல் பக்கத்திலேயே சர்வீஸ் என்ற டேப் இருக்கும், அதை கிளிக் செய்து 'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யவும்

படி 3:
'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யப்பட்ட பின்பு, புதிய இணையபக்கத்திற்கு செல்லும், இப்பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகிய தகவல்களை கேட்டும். அனைத்திற்கும் சரியான தகவல்களை பதிவிட்டு சப்மிட் என பட்டனை தட்டுங்கள்

படி 4:
இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் , அதனை கொடுக்கப்பட்ட இடத்தில் கொடுத்து வேலிடேட் செய்ய வேண்டும்
.
படி 5:


உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருந்தால் தகவல்களின் கடைசியில் ஆக்டீவ் என்று இருக்கும்.

வங்கிக் கட்டணங்களை (Hidden Bank Charges) கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா ?

 வங்கிக் கட்டணங்களை (Hidden Bank Charges) கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா  ?

வங்கிக் கட்டணங்களை கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா ?


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வங்கி கட்டணங்களை செலுத்துவதில் இருந்து தப்பிப்பது எப்படி?

உங்கள் வங்கி எதற்காக உங்களுக்கு கட்டணங்களை விதிக்கிறது என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? தேவையில்லாத கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை நெருங்கிக் கண்காணிக்க வேண்டும்.
கூடுதல் வங்கி கட்டணங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் இந்த குறிப்புகளை நடைமுறையில் பயற்சி செய்யுங்கள்.

வங்கி கட்டணம்

நீங்கள் ஒரு வங்கியில் ஒரு புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது வங்கிக் கட்டணங்களை கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். குறைந்தபட்ச நிலுவைத் தொகை கட்டணம், ஒரு காலவரையறைக்குட்பட்ட சேமிப்புக் கணக்கிலிருந்து மிக விரைவாக பணத்தை எடுத்ததற்கான கட்டணம், ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தியதற்கான கட்டணம் போன்ற கட்டணங்களை கண்காணிப்பதன் மூலம் அவற்றை தவிர்க்க முடியும்.
மேலும் காலப் போக்கில் அந்த கட்டணங்களுக்காகும் மிகப் பெருமளவு பணத்தை சேமிக்கவும் முடியும்.

ஏ.டி.எம் கட்டணம்

ஏ.டி.எம் பயன்பாடு உங்கள் வங்கியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஏ.டி.எம் வழங்குபவர்கள் மற்றும் உங்கள் வங்கி இருவரும் உங்களுக்கு கட்டணம் விதிக்க வழிவகுக்கும். பண மதிப்பீட்டிழப்பிற்குப் பின்பு நிறைய வங்கிகள் அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைகள் வரை வங்கியிலிருந்து பணம் எடுத்த பிறகு கட்டணங்களை வசூலிக்கிறது. உங்களுக்குத் தேவையற்ற செலவாக சிறிய அளவு பணம் வருடந்தோறும் பல ஆயிரம் ரூபாயாக சேர்ந்து விடுகிறது.

வங்கி கணக்கை முடித்தல்

சில வங்கிகளில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கை ஒரு குறிப்பிட்ட கால வரையறை வரை திறந்து வைத்திருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணங்களை சரி பாருங்கள்.

மிகைப் பற்று

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகமாக நீங்கள் செலவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதை விட அதிகப் பணத்தை நீங்கள் செலவு செய்யும் போது வங்கிகள் மிகைப் பற்றுக் கட்டணத்தை விதிக்கின்றன. உங்கள் சோதனைக் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டாலும் கூட மிகைப்பற்று பாதுகாப்பு உங்களுக்கு கட்டணத்துடன் கூடிய கொள்முதல்களுக்கு அனுமதியளிக்கும்.

வங்கி அட்டையை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்துதல்
சில வங்கிகள் உங்கள் வங்கி கார்டை டெபிட் கார்டாகவோ அல்லது கிரெடிட் கார்டுக்கு மாற்றாகவோ பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு அல்லது ஐந்து பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கிறது. கட்டணங்கள் வங்கியைப் பொறுத்தது. ஒவ்வொரு முறை நீங்கள் பணப் பரிமாற்றம் செய்யும் போதும் உங்கள் வங்கி கார்டை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது வருடத்திற்கு சில நூறு ரூபாய்களை நீங்கள் சேமிக்க உதவும்.

இணையத்தில் வங்கிப் பணப் பரிமாற்றங்கள் செய்யுங்கள்


இன்று பெரும்பாலான வங்கிகள் இணைய சேவைகளை வழங்குகின்றன. உங்களிடம் ஒரு கணினி அல்லது ஸ்மார்ட் போன் இணைய இணைப்புடன் இருந்தால், நீங்கள் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கலாம் மேலும் காகித அறிக்கைக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும் இணைய வழியாகவே புதிய காசோலைகளைப் பெறும் வசதிகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே இது வழக்கமாக வங்கி வழியாக புதிய காசோலைகளைப் பெறுவதைக் காட்டிலும் மலிவானது.

வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.

வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வாடகை ஒப்பந்தத்தில் எத்தனை வகை உள்ளது..?

உங்களுக்குச் சொந்த வீடு இல்லையென்றால் வாடகை ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையே கையெழுத்திடப்படும் ஒரு ஒப்பந்தமாகும்.
வாடகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளர் வாடகை இருப்பவருக்கு அவருடைய குடியிருப்புச் சுற்றுப்புறங்களில் வசிக்க அனுமதி அளிக்கிறார்.
வாடகை ஒப்பந்தத்தில் மூன்று வகை இருக்கின்றன. அவை பின்வருமாறு:

11 – மாத குத்தகை ஒப்பந்தம்
இது ஒரு குறுகிய கால ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் 11 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். நில உரிமையாளரும் வாடகைக்காரரும் இருவருமே இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகை வாடகை ஒப்பந்தத்தில் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லாததால் இது அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


நீண்ட காலத்திற்கான குத்தகை ஒப்பந்தம்
 பெயருக்கேற்றாற் போல இந்த நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் என்பது பொதுவாக நீண்ட காலத்திற்கானதாகும். அது ஒரு வருடமாக இருக்கலாம், ஐந்து வருடங்களாக இருக்கலாம், பத்து வருடங்களாக இருக்கலாம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருக்கலாம். பொதுவாக நீண்ட கால வாடகை ஒப்பந்தங்கள் குடியிருக்கும் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன.


வணிக ரீதியான குத்தகை ஒப்பந்தம்
 உரிமையாளர் ஒரு சொத்தை வாடகைக்காரருக்கு வியாபார நோக்கங்களுக்காக வாடகைக்கு விட்டால் அவர்கள் வணிக ரீதியான ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அவசியமாகும். நில உரிமையாளருக்கும் வாடகைக்காரருக்கும் இடையே ஒரு வணிக ரீதியான ஒப்பந்தம் நிறுவப்படுகிறது. ஒரு வாடகை ஒப்பந்தத்தை வியாபாரத்தின் தேவைகளைப் பொறுத்துத் தனிப்பட்ட முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம்.


நிறைவு
 ஒரு நல்ல வாடகை ஒப்பந்தம் என்பது வாடகைக்காரர் மற்றும் நில உரிமையாளர் இருவரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, நீங்கள் ஒப்பந்தத்தைக் கவனமாகப் படித்து அதிலுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் புரிந்து கொண்டு அவற்றிற்குச் சம்மதிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.