K Karthik Raja's Share Market Training - Simple Moving Average Calculation

K Karthik Raja's Share Market Training - Simple Moving Average Calculation

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja's Share Market Training - Simple Moving Average Calculation

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

K Karthik Raja's Share Market Training - What to do in Bear Market ?

K Karthik Raja's Share Market Training - What to do in Bear Market ?

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

K Karthik Raja's Share Market Training - What to do in Bear Market ?

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

K Karthik Raja's Share Market Training - How to Place Trading Orders - Stop - Limit - order

K Karthik Raja's Share Market Training - How to Place Trading Orders - Stop - Limit - order

                                 
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்                          Click Here :- Register for Free Training
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
https://share-market-training-rupeedesk.business.site

How to Place Trading Orders - Stop - Limit - order


K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-account-kids


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்களுக்காக "மைனர் வங்கிக் கணக்கு ("minor account") வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இக் கணக்கின் மூலம், மிகக் குறைந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். கல்விக்கான காப்பீடு, நிலையான வைப்பீடு, மற்றும் அதிகமான வட்டி விகிதம் எனப் பல சிறப்பு அம்சங்களைக் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் கொண்டுள்ளன. உங்களுடைய குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும்.

வங்கிக் கணக்குத் தொடங்க தேவையானவை பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக இவ்வகையான கணக்குகளைத் தொடங்கு முடியும். குழந்தைகளுக்குக் கூட இவ்வகையான கணக்குகளைத் தொடங்கலாம். ஒரே வங்கியில் கணக்குத் தொடங்கலாம் : பெற்றோருக்குக் கணக்கு உள்ள வங்கிகளில் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவதைத் தான் பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

முகவரிக்கு ஆதாரம் ஆதார் அட்டை உட்பட அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

கையெழுத்து மாதிரி குழந்தையின் கையெழுத்து மாதிரி (பத்து வயதுக்கு மேற்பட்டு இருந்தால்) மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையெழுத்து மாதிரியைச் சமர்ப்பிக்க வேண்டும்

சிறப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகள் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இது வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.

தேவையான குறைந்தபட்ச இருப்பு உதாரணமாக, எச்டிஎப்சி வங்கி, மைனர் வங்கிக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

வட்டி விகிதம் பொதுவாகச் சிறுவர்களுக்கான வங்கிக் கணக்குகளுக்கு அதிகமான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். சில வங்கிகள் பெற்றோருடன் சேர்ந்த கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கவும் அனுமதிக்கின்றன.

டெபிட் கார்டு வசதி கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள், ஜீனியர் சேமிப்புக் கணக்குகளுக்கு, ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை பணம் எடுக்கும் வசதியுடன் கூடிய டெபிட் கார்டுகளை வழங்குகின்றன

சுழல் வைப்புநிதி வசதி பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நிலை வைப்பாகக் குழந்தைகளின் கணக்கிற்கு மாற்றப்படும்.

நிலையான வைப்புத் தொகை உதாரணமாக HDFC வங்கி சிறுவர் வங்கிக் கணக்குகளில் 25,000 ரூபாய்க்கு அதிகமான எந்தத் தொகையையும் நிலை வைப்புநிதியாக வைத்துக் கொள்ளும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தொகை மிக அதிக வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்

கல்விக்கான காப்பீடு முக்கியமான வங்கிகள், சிறுவர் வங்கிக் கணக்குகளுக்குக் கல்விக் காப்பீடு வசதியையும் வழங்குகின்றன. ஒரு வேளை குழந்தைகளின் காப்பாளர் இறந்துவிட்டால் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இது உதவும். காசோலைகள், இணைய வங்கிச் சேவை போன்ற பிற வசதிகளும் இவ்வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள், குழந்தைகளுக்கு 10 வயது நிரம்பியவுடன்தான் அவர்களை வங்கிக் கணக்குகளை இயக்க அனுமதிக்கின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை குழந்தைகளுக்குப் பதினெட்டு வயது ஆனவுடன் அவர்களுடைய வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். இக்கணக்கை இயக்குகின்ற உரிமை காப்பாளர்களுக்கு மறுக்கப்படும். மேலும், தேவையான தகவல்கள் பெறப்பட்டு இந்த வங்கிக் கணக்குப் பதினெட்டு வயது நிரம்பியவரின் பெயரில் முழுமையான கணக்காக மாற்றப்படும். குழந்தை வங்கிக் கணக்குகளின் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் சில குறிப்பிட்ட வரையறைகளை விதித்திருந்தாலும், இக்கணக்கிலிருந்து காப்பாளர்கள் அதிகப்படியாகப் பணம் எடுப்பதற்கும், மேலும் சில பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் வங்கிகள் அனுமதி வழங்கும்.

அவசர (Emergency Fund) நிதி என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?

அவசர நிதி என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?
what-is-mean-emergency-corpus-why-maintain-it


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


அவசர கார்பஸ் அல்லது அவசர நிதி என்பது எதிர்பார்க்காத தருணங்களின் தேவைக்காக உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் விதத்தில் வைக்கப்படும் பணமாகும். இது வேலை இழப்பு, முக்கியமான மருத்துவப் பிரச்சினைகள், வருமானத்தில் தாமதம் அல்லது இறப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் ஒருவருக்குப் பெரிய உதவியாக இருக்கும். இந்த அவசர சூழ்நிலைகள் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்று பிரிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு, அல்லது சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை குறுகிய கால அவசர தேவைகள் ஆகும். அதே சமயம், வேலை இழப்பு போன்றவை நீண்ட கால அவசர தேவையாகும். சிறிய வர்த்தக வியாபாரங்களுக்கான, அவசர நிதி அவசியமாகிறது.

வணிகர்கள் பல சந்தர்ப்பங்களில், வணிகர்கள் பொறுப்பற்ற முறையில் தங்கள் சொந்த நிதிகளில் பெரும் பகுதியை தங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தையின் முடிவுகள் தீர்மானிக்க முடியாததாக இருப்பதால் முதலீடு செய்யும் பணம் லாபமா அல்லது நஷ்டமா என்பதை முன்கூடியே உறுதியாகச் சொல்வதற்கில்லை. புத்திசாலியான வியாபாரிகள் கூடத் திவாலாகிவிட்ட நிலைமைகளும் உள்ளன. இத்தகைய பேரழிவுகளுக்கு அவசர நிதி அவசியம்.

கடன் சிறிய வியாபாரங்கள் தோல்வியடையும் காரணங்களில் ஒன்று, கடன் அட்டைகள் அல்லது பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்களில் கடன் பெறுவது போன்ற குறுகிய காலக் கடன்களை எடுத்துக்கொள்வதற்கான ஆபத்துகளாகும். இந்தக் கடன்களின் மீதான அதிக வட்டி விகிதம் , வர்த்தகரின் வருவாயைக் கடந்துவிடும்.

உங்கள் அவசர தேவைக்குத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு வியாபார திட்டத்திற்கும் அவசர நிதி என்பது முகவும் முக்கியம். இதில் மற்றொரு முக்கியச் செய்தி, இந்த அவசர நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது. உங்களுடைய அவசர நிதியை அணுகுவதற்கு நீங்கள் தீவிரமாகக் கருதுகிற நிகழ்வுகளின் பட்டியல் அவசியம். அவற்றுள் சில, 1) சந்தையில் திடீர் ஏற்றத்தாழ்வு 2) பொருளாதார நெருக்கடி அல்லது சரிவு 3) தனிப்பட்ட இயலாமை அல்லது உடல்நல அவசரநிலை 4) இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் எவ்வாறாயினும், ஒவ்வொரு எதிர்பாராத சம்பவமும் அவசர நிதியத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத காரணியாகக் கருதப்படக்கூடாது. அவசர நிதி பயன்படுத்த உங்கள் காரணங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபுறம், அவசர நிதியில் இருந்து கூடுதலான திரவச் சொத்துக்களைப் பராமரிப்பது, உங்களுக்கு மிகவும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்க உதவுகிறது. உதாரணமாக, ஒரு நல்ல IPO அல்லது ஒரு நிகழ்வு சார்ந்த பங்கு வர்த்தகம் முதலீடு நல்ல பலனைத் தரலாம். திரவச் சொத்துக்கள் , உங்கள் வணிகம் உறுதியாகவும் எளிதாகவும் பயணிக்க உதவுகிறது.

தனிக் கணக்கை பராமரிக்க வேண்டும் உங்கள் தனிப்பட்ட கணக்கு உங்கள் வணிகக் கணக்கிலிருந்து தனித்திருப்பது போலவே, உங்கள் அவசர கணக்கு உங்கள் வணிகக் கணக்கில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். இந்தப் பழக்கம், அவசரம் அல்லாத போது அவசர நிதி பயன்படுத்தும் சலனத்தைக் குறைக்கும். இன்னும் வலியுறுத்திக் கூற,வேண்டுமானால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குத் தவிர, அவசரக்கால நிதி வரம்புகளை நிறுத்த வேண்டும். அவசர நிதியைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடம் சேமிப்பு கணக்கு மட்டுமே ஆகும். சில வகைக் கணக்குகளில் , பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது சில அபராதம் விதிக்கப்படலாம், அல்லது பணம் கிடைப்பதில் காலத் தாமதம் ஏற்படலாம். இத்தகைய திட்டத்தில் அவசர நிதிகளை முடக்கம் செய்ய வேண்டாம். ஒரு நிலையான வைப்பு நிதியில் பணத்தைச் சேமித்து வைக்கவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு அவசர தேவை ஏற்படும்போது உங்கள் கையில் பணப்புழக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ம்யுசுவல் பன்ட் முதலீடு கூட இந்த நோக்கத்தைப் பாதிக்கலாம்.

அவசர நிதி தொகை தனிப்பட்ட அவசர நிதியத்தின் முக்கிய விதி இங்கே பயன்படுத்தப்படலாம். தொடக்க நிலை வர்த்தகர்கள், உங்கள் நிறுவன இயக்கத்திற்கான மூன்று மாத தொகையை அவசர நிதியாகச் சேமித்து வைக்கலாம். இதனைச் செய்ய, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கான செலவை கணக்கிட வேண்டும். செலவுகள் உங்கள் மாதாந்திர முதலீட்டு அளவு, தரகு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது



நீங்கள் அதிக ஆபத்தை எடுக்கும் வர்த்தகர் என்றால், அவசர நிதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும். உங்களுடைய அபாயச் சூழ்நிலை மற்றும் கணக்கீடுகளையும் பொறுத்து, உங்கள் செலவினங்களில் மூன்று-ஆறு மாதங்களை உள்ளடக்கிய நிதி உருவாக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில், நீங்கள் நிம்மதியாக உங்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியும். வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியும்.

ஃப்ரீலான்ஸர்கள்(freelancers)எப்படித் நிதி நிர்வாகம் செய்ய வேண்டும்?

ஃப்ரீலான்ஸர்கள்(freelancers)எப்படித் நிதி  நிர்வாகம் செய்ய வேண்டும்?
how-freelancers-can-manage-their-finances



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வேலையைக் கைவிட்டார். அவருடைய இந்தச் சுய தொழிலில், வேலை அவருக்குப் பிடித்திருந்தாலும், ஒழுங்கற்ற பண வரவு, அவருடைய பண மேலாண்மையைப் பாதித்தது.

ஒவ்வொரு முறையும் அவருக்குப் பண வரவு இருக்கும்போது அதனை அவர் செலவழித்துக் கொண்டிருந்தார். அவர் தனக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமிக்கக் வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு குறைந்த அளவு பணத்தை மட்டுமே சேமிக்க முடிந்தது. அவருடைய நிதி நிலைமையைச் சரியான பாதையில் கொண்டு வர அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் இக்காலகட்டத்தில் விரும்பினார். சுந்தர் தனக்கு வழக்கமான வருமானம் கிடைத்தவுடன் தொடக்க நிலையில் இருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு இதே நிலை இருக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஃப்ரீலான்ஸ் எனப்படும் சுய தொழில் செய்பவர்கள் நிதி நிலையை மேம்படுத்த சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் படியாகத் தனது ஆண்டு வருமானத்தை மதிப்பிட வேண்டும். சுய தொழிலில் வருமானம் ஒழுங்கற்றதாக இருப்பதால், தான் எதிர்பார்க்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாத சம்பளத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்ய வேண்டும் . ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகச் செலுத்த வேண்டும். சாத்தியமான வருவாயில் ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு செய்வது சிறந்தது. இல்லையெனில் தேவையானதை விடக் குறைந்த அளவு பணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அடிப்படை வருமானத்தை ஏற்படுத்தியவுடன் செலவினங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இது உங்களின் வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உங்களின் செலவீனங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும். அனைத்துக் கட்டாய மற்றும் அத்தியாவசிய வாழ்க்கை செலவுகளை முன்னிலைப் படுத்த வேண்டும். உங்கள் தொழில் உறுதியாக நிலைக்கும்வரை, வாழ்க்கை முறை செலவீனங்களைக் குறைப்பது நல்லது. ஆரோக்கியம், ஆயுள் காப்பீடு, மற்றும் வரிப் பொறுப்புகள் போன்றவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் ஒருவரின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தடம் புரள வைக்கும்.

இதற்கிடையில் ஒரு அவசர  நிதி உற்பத்தி செய்வது அவசியமாகும். வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் எதிர்பாராத இடைவெளி ஏற்படும் போது இந்த அவசர நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இடைவெளியைக் குறைக்க இந்த அவசர நிதி உங்களுக்கு உதவும். வருமானம் அதிகப்படியாக வரும்போது, ஏற்கனவே பயன்படுத்திய அவசர நிதியை மறுபடியும் விரைந்து நிரப்ப வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் எந்த ஒரு கட்டாய ஊழியர் சேமிப்பு திட்டத்திலும் இணைக்கப்படாததால், தனது வருமானத்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க முயற்சிக்க வேண்டும். சம்பளத்திற்கு மேல் அதிகரித்த வருவாய் கிடைக்கும்போது வீண் செலவுகளைச் செய்யாமல் முதலீடுகளை உருவாக்க வேண்டும்.


முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்?

முதலீடுகள் செய்யும் போது நாமினி ஏன் முக்கியம்?
Importance-nominee-when-doing-investments


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ஒவ்வொரு முறையும் முதலீட்டிற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்யும்போது , அது நிலையான வைப்பு நிதியாக இருந்தாலும், மியூசுவல் நிதியாக இருந்தாலும், வங்கியில் புதிய கணக்குத் துவங்குவதாக இருந்தாலும் அந்தப் படிவத்தில் ஒரு தனிப் பிரிவு ஒன்று இருக்கும். அதில் உங்கள் நாமினி பற்றிய குறிப்பைத் தருமாறு வேண்டியிருப்பார்கள். இந்தப் பகுதியை பெரும்பாலும் பலர் எதுவும் எழுதாமல் காலியாவே பதிவு செய்வார்கள். ஆனால் அதனை அப்படிச் செய்வது தவறு. இது குறித்துத் தெளிவு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தப் பதிவு.

நாமினி என்பவர் யார்?

நாமினி என்று உங்கள் முதலீட்டு விண்ணப்பம், அல்லது வங்கி கணக்கு விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் நபர், உங்களின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு உங்கள் கணக்கில் உள்ள தொகையைப் பெறுவதற்கான உரிமை உள்ளவர். நாமினியாக உங்கள் முதல்வட்ட சொந்தத்தை நீங்கள் அறிவிக்கலாம். அதாவது உங்கள் பெற்றோர், உங்கள் துணைவர், அல்லது உங்கள் உடன்பிறந்தவர்கள். சில முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினியை குறிப்பிடும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நபருக்கும் உங்கள் தொகையில் குறிப்பிட்ட விகிதத்தைப் பிரித்துப் பதிவு செய்யலாம். அப்படி நீங்கள் எந்த விகிதமும் குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள தொகை சமமாகப் பிரிக்கப்படும்.

ஏன் ஒருவரை நியமிக்கவேண்டும்? எதிர்பாராத விதமாக இறந்தவரின் வங்கி கணக்கில் மற்றும் முதலீட்டில் இருக்கும் பணம் அவருடைய சட்ட வாரிசுகளுக்கு உரிமையாகிறது. இதனைச் சொல்வதற்கு மிகவும் சுலபமாக இருந்தாலும் செயல்முறையில் இது மிகப்பெரிய காரியமாக உள்ளது. பல வித ஆவணங்கள் , இறப்புச் சான்றிதழ் சில நேரங்களில் நீதிமன்ற ஆர்டர் போன்றவையும் தேவைப்படுகிறது. வங்கிக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்கும் வரை, இறந்தவரின் பணம் வங்கியிலேயே வைக்கப்படும். இந்த முழுச் செயல்முறையும் முடிய சில வாரங்கள் பிடிக்கும். இருப்பினும், வங்கி கணக்குத் தொடங்கும்போது அல்லது அதற்குப் பின்னர், உங்கள் பெயர் நாமினியாக இணைக்கப்பட்டிருந்தால் இந்தச் செயல்முறை சற்று எளிதாகவும் விரைவாகவும் முடியும். வங்கியும் நியமிக்கப்பட்டவரிடம் குறைந்த ஆவணங்கள் மூலம் பணத்தைக் கொடுத்துவிடலாம்.

வங்கி லாக்கருக்கும் நாமினி உண்டு வங்கி கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு மட்டும் எதிர்பாராத படி இறந்தவருக்கான நாமினி தேவைப்படுவதில்லை, வங்கி லாக்கருக்கும் நாமினி தேவை. லாக்கர் கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மறைவிற்குப் பின், நாமினி இல்லையேல், குறிப்பிட்ட ஆவணங்கள் கொடுத்த பிறகே, லாக்கரில் உள்ள பணம் மற்றும் நகைகளை வங்கியில் இருந்து ஒப்படைப்பார்கள். இதனை இங்கே குறிப்பிடக் காரணம், இந்திய பெண்கள் தங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். ஆகவே இத்தகைய நெருக்கடியான சூழலில், நகைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். புதிதாக மணமானவர்கள் அல்லது கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பேங்க் லாக்கர் கணக்கிற்கும் நாமினி அவசியம் தேவை

பணத்தை வங்கியிடம் கோரப்படாமல் இருக்கக் கூடாது இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரியில் தந்த அறிக்கை பிரகாரம், ரூபாய் 8,000 கோடி கோரப்படாத நிதியாக நாடு முழுவதும் உள்ள வங்கியில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. உரிமையாளர் இல்லாத வைப்பு நிதி, கோரப்படாத நிதியாக அறிவிக்கப்படுகிறது. அசல் உரிமையாளர் வைப்பு நிதியின் விவரத்தை இழந்திருக்கலாம், அல்லது இறந்திருக்கலாம் அல்லது நாமினி பற்றிய தகவலை குறிப்பிடாமல் இருக்கலாம். இதன் காரணமாக இந்த நிதி கோரப்படாத நிதியாக உள்ளது. நாமினி பெயர் குறிப்பிடாமல் இருப்பதால் எவ்வளவு பிரச்சனை என்பதை இந்த மாபெரும் தொகை நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஒரு முறை வங்கிக்கு சென்று உங்கள் கணக்கில் நாமினி பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் குறிப்பிடவில்லை என்றால் அதற்கான படிவத்தை வாங்கி விண்ணப்பியுங்கள்.

பெண்கள் பெண்கள் இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குடும்ப உறுப்பினரின் திடீர் மறைவால் அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களின் பணமும் பறிபோவது நிச்சயம் நடக்கக் கூடாத ஒன்று. இத்தகைய சூழ்நிலையை யாரும் அனுமதிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு நாமினி உள்ளார் என்பதை உங்கள் வீட்டுப் பெண்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வருங்காலத்தில் ஏற்படும் நிச்சயமற்ற சூழலை சமாளிக்க ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.